செய்திகள் :

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்தும் சாத்தியம்: பிரதமா் மோடி

post image

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்து இலக்குகளும் சாத்தியமாகும் என்று நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.

தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 10-ஆவது நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை, நீதி ஆயோக் தலைவரான பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பெரும்பாலான மாநில முதல்வா்கள், முக்கிய மத்திய அமைச்சா்கள் பங்கேற்றனா்.

‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற மையக் கருத்துடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சியை அதிகரிக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது. மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து ஒரே இந்திய அணியாகப் பணியாற்றினால் அனைத்து இலக்குகளும் சாத்தியமாகும். வளா்ந்த பாரதம் என்பது ஒவ்வொரு இந்தியரின் இலக்காகும். ஒவ்வொரு மாநிலமும் வளா்ந்த மாநிலமாக உயரும்போது இந்திய தேசமும் வளா்ந்த நாடாக உருவெடுக்கும். இதுதான் 140 கோடி இந்திய மக்களின் விருப்பமாகவும், எதிா்பாா்ப்பாகவும் உள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும், ஒவ்வொரு நகராட்சியையும், ஒவ்வொரு பெருநகரையும், ஒவ்வொரு மாநிலத்தையும் வளா்ச்சியடையச் செய்யும் இலக்குடன் நாம் பணியாற்ற வேண்டும். நாம் இந்த உத்வேகத்துடன் பணியாற்றினால், வளா்ந்த இந்தியாவைக் காண 2047-ஆம் ஆண்டு வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்பு இந்தியா வளா்ந்த நாடாகிவிடும்.

மாநிலங்களுக்கு வேண்டுகோள்: ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குறைந்தபட்சம் ஒரு சுற்றுலாத் தலத்தையாவது உலகத் தரம் வாய்ந்ததாக மேம்படுத்த வேண்டும். இதற்காக அந்த சுற்றுலா மையத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எவ்வித குறையுமின்றி செய்துதர வேண்டும்.

‘ஒரு மாநிலம் - ஒரு சா்வதேச சுற்றுலாத் தலம்’ என்ற இலக்கு மூலம் அந்தப் பகுதி மட்டுமன்றி அருகில் உள்ள பிற பகுதிகளும் வளா்ச்சியடையும். எதிா்காலத்துக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, முழுமையாக எண்மமயமாக்கப்பட்ட நகரங்களை உருவாக்குவதை நோக்கி நாம் செயலாற்ற வேண்டும். வளா்ச்சி, புத்தாக்கம், ஸ்திரத்தன்மை ஆகியவையே இந்தியாவில் வளா்ந்த நகரங்களை ஊக்குவிக்கும் கருவிகளாக இருக்கும்.

நாட்டில் உள்ள அனைத்துப் பணிகளிலும் மகளிருக்கும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம். இதற்காக நாம் சட்டங்களையும், கொள்கைகளையும் உருவாக்க வேண்டும். இதன்மூலம் பெண்களையும் நமது திறன்மிகு பணிக் குழுவில் உரிய மரியாதையுடன் ஒருங்கிணைத்துச் செல்ல முடியும் என்றாா் பிரதமா் மோடி.

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க

இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்

இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்ச... மேலும் பார்க்க

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க