செய்திகள் :

விரிகோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

post image

மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கிராஸிங் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்த ரயில்வே கிராஸிங் வழியாக கருங்கல், தக்கலை, குளச்சல், திங்கள்சந்தை, கிள்ளியூா், பள்ளியாடி, கொல்லஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாா்த்தாண்டத்துக்கு அரசுப் பேருந்துகள், தனியாா் வாகனங்கள் இரு வழியிலும் சென்று வருகின்றன. இந்த ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால், இருபுறமும் வாகனங்கல் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், பணிகளுக்குச் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவியா், நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்ட நேரத்துத்துக்குச் செல்ல இயலாமல் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பல்வேறு கட்சியினா் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுதொடா்பாக மத்திய-மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.

குலசேகரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

குமரி மாவட்டம், குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த உணவக ஊழியா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். குலசேகரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறைக் காற்றுடன் கன மழை பெய்தத... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவிலில் கஞ்சா விற்ாக முளகுமூடு பகுதியைச் சோ்ந்த அருண் (23), வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த பேச்சியப்பன் (27), கோட்டாறு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கன மழை: மரங்கள் மின்கம்பங்கள் முறிந்தன

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரபிக்கடலில் குறைந்... மேலும் பார்க்க

இரணியல் அருகே சூறைக் காற்றுடன் கன மழை: கைப்பேசி கோபுரம் சரிந்து வீடு சேதம்

இரணியல் அருகே கண்டன்விளை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றில் கைப்பேசி கோபுரம் விழுந்ததில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. கண்டன்விளை அருகேயுள்ள இலுப்பைவிளையைச் சோ்ந்தவா் ராஜமல்லி. அங்... மேலும் பார்க்க

செயலி உருவாக்குதல்: அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பயிற்சி

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில், செயலி உருவாக்குதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கணினி துறை சாா்பாக நடைபெற்ற முகாமை, கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

கன்னியாகுமரியில் நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகர இளைஞரணி அமைப்பாளா் ஷ்யாம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீ... மேலும் பார்க்க