செய்திகள் :

'கொலை மிரட்டல் விடுத்தவரை கண்டறியாமல் விளம்பரப்படுத்துவதா?' - வேலுமணி வருத்தம்!

post image

கோவை அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது,

வேலுமணி

“கோவை மாநகராட்சி அறிவித்துள்ள வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அடிப்படை திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டுக்கு திமுக எந்தத் திட்டங்களையும் கொண்டு வரவில்லை. 

இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சிரமத்தில் உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் மட்டுமே மாற்றம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி இருந்தபோது மத்திய அரசிடம் அதிக நிதிகள் வாங்கப்பட்டன.

கோவை மழை

தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. எந்த முன்னெச்சரிக்கையும் செய்யப்படாததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நீர்நிலைகள் தூர் வாரப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளோம்.

மாநகராட்சியில் எந்த வேலையும் நடப்பதில்லை. வரி உயர்வு மட்டுமே நடக்கிறது. எனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. பொதுச் செயலாளர் அறிவுறுத்தல் அடிப்படையில் வழக்கறிஞர் அணி, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தனர். மிரட்டல் கடிதம் அனுப்பியவர்கள் யார் என்று கண்டறியாமல், அதை ஊடகங்களுக்கு கொடுத்து  விளம்பரப்படுத்தியது வருத்தமாக உள்ளது.

மிரட்டல்

கட்சிக்கும், மக்களுக்கும் எப்போதும் விசுவாசமாக என் பயணம் தொடரும். எனக்கு மட்டுமல்ல, யாருக்கு இது போன்ற கொலை மிரட்டல் வந்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

’மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வேண்டும்’- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பாண்லே நஷ்டத்தில் இயங்குகிறது… பாதி ஊழியர்களை காணவில்லை’ – அப்செட்டான முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி குருமாம்பேட்டில் இயங்கி வரும் அரசின் பாண்லே நிறுவனத்தில், 20,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி நேற்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய ... மேலும் பார்க்க

நிதி ஆயோக்: முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பும்… திமுக-வின் குற்றச்சாட்டுகளும்!

நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் ஆட்சிக் குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியிர... மேலும் பார்க்க

Trump: 'இதை செய்யவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்' - மிரட்டும் ட்ரம்ப்

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கி... மேலும் பார்க்க

'விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு' - பிரேமலதாவின் கணக்கு என்ன?

தே.மு.தி.க மீது மாறி, மாறி கூட்டணி பேரம் பேசும் கட்சி என்கிற விமர்சனம் இருக்கிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் உறுதியாக இருந்தார், பிரேமலதா. தே.மு.தி.க தலைவர... மேலும் பார்க்க

4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திருக்கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமெனக் கருதியர்களில் ஒருவராகத் திகழும் பி.கே.சேகர்பாபுவை, அறநிலையத்துறை அமைச்சரா... மேலும் பார்க்க