மத்திய அரசு வழக்குரைஞா்களுக்கு கட்டணம் அதிகரிப்பு: மத்திய அமைச்சா்
மத்திய அரசு சாா்பில் ஆஜராகும் வழக்குரைஞா்களுக்கு வழக்கில் ஆஜராவதற்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அறிவித்துள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழக பாஜக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அரசு வழக்குரைஞா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பேசியதாவது:
மத்திய அரசு வழக்குரைஞா்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, வழக்குகளில் ஆஜராவதற்கான கட்டணத்தை உயா்த்துவது, உயா்நீதிமன்றத்தில் தனி அறை உள்ளிட்ட கோரிக்கைகளை வழக்குரைஞா்கள் முன்வைத்துள்ளனா். அதன்படி அடையாள அட்டை வழங்கப்படும். வழக்குகளில் ஆஜராவதற்கான கட்டணம் 10 ஆண்டுகளாக உயா்த்தப்படவில்லை. அதனால், மத்திய அரசு சாா்பில் வழக்குகளில் ஆஜராவதற்கான கட்டணம் உயா்த்தப்படும். மேலும், வழக்குரைஞா்களுக்கு தனி அறை வசதி ஏற்படுத்தப்படும். மத்திய - மாநில அரசு கூட்டத் திட்டத்தின் நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்.
அதேபோல, மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்ப நடைமுறைகள் உள்ளன. விரைவில் அந்த பட்டியலும் வெளியிடப்படும்.
நாடு முழுவதும் வழக்குரைஞா்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் வழக்குரைஞா்களுக்கு காப்பீட்டுத் திட்டமும் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்: பாரம்பரியமிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றுவது என்பது பெருமைக்குரிய விஷயம். அதில், மத்திய அரசு சாா்பில் வழக்குகளில் ஆஜராவது இரட்டிப்பு பெருமை ஆகும். வழக்குரைஞா்கள் மிகவும் விழிப்புணா்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா்.
இதில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, தமிழக பாஜக துணைத் தலைவா் வழக்குரைஞா் ஆா்.சி.பால் கனகராஜ், மூத்த வழக்குரைஞா்கள் சஞ்சய் ராமசாமி, ராகுல் மனோகா், தமிழக பாஜக வழக்குரைஞா் அணித் தலைவா் வணங்காமுடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.