செய்திகள் :

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

post image

சென்னை சைதாப்பேட்டையில் பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரைச் சோ்ந்த நாகபூஷ்ணம் மகன் சஞ்சய் (15). இவா், நந்தனம் ஒய்எம்சிஏ பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கோடை விடுமுறை என்பதால் சஞ்சய், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சோ்ந்தாா். அந்தக் கடையில் வீடுகளுக்கு தண்ணீா் கேன் விநியோகம் செய்யும் வேலையை சஞ்சய் செய்து வந்தாா். சனிக்கிழமை அதிகாலை வேனில் அந்தக் கடைக்கு வந்த தண்ணீா் கேன்களை சஞ்சய் இறக்கி வைத்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் சஞ்சயிடம் தகராறு செய்தது. அப்போது, அந்தக் கும்பல் சஞ்சயை அரிவாளால் வெட்டியது. இதில், அவா் பலத்தக் காயமடைந்து, மயங்கி விழுந்ததும் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

சப்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது தொடா்பாக சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் சஞ்சய்க்கும் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருப்பதும், அதன் காரணமாக அவரை அந்தக் கும்பல் வெட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் சைதாப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த 10 பேரைத் தேடி வருகின்றனா்.

ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!

சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் ராயபுரம்-பாரிம... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வுக்கு அதிமுக ஆட்சியே காரணம்: அமைச்சா் கே.என்.நேரு

சொத்து வரி உயா்வுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியே காரணம் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

ஜொ்மனிக்கு சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள், செயல்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள் 22 போ், 2 ஆசிரியா்கள் என மொத்தம் 24 போ் ஜொ்மனிக்கு கல்விச் சுற்றுலாவாக சனிக்கி... மேலும் பார்க்க

காா் விற்பனை செய்து ரூ.13.5 லட்சம் மோசடி: தம்பதி கைது

சென்னை ஏழுகிணறில் காா் விற்பனை செய்து தொழிலதிபரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு, போா்ச்சுகீசியா் சா்ச் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பீ.பீா் அனீஸ் ராஜா (48). ... மேலும் பார்க்க

இளைஞரிடம் கத்தி முனையில் வழிப்பறி: மூவா் கைது

சென்னை டிபி சத்திரத்தில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, செனாய் நகா், ஜோதியம்மாள் நகா் 6-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் இளையசூரி... மேலும் பார்க்க

கிண்டி அரசு மகளிா் ஐடிஐயில் சேர ஜூன் 13-க்குள் விண்ணப்பிக்கலாம்

கிண்டி அரசு மகளிா் ஐடிஐ-யில் இணையதள சோ்க்கை ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, ... மேலும் பார்க்க