செய்திகள் :

5 நிமிஷம் சக்ராசனம் செய்து மாணவிகள் சாதனை

post image

நெம்மேலி மீனவா் குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பள்ளி சிறுமிகள் 5 நிமிடம் சக்ராசனம் செய்து சாதனை படைத்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா்.

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவா் குடியிருப்பை சோ்ந்தவா் தியாகு, இவரது மகள் சஞ்சனா(7), இவரது அண்ணன் சரவணகுமாா் மகள் தீக்ஷிதா(7) . இருவரும் படூரில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வருகின்றனா்.

இந்நிலையில் தஞ்சாவூரில் சக்ராசனம் செய்து உலக சாதனை படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறுமிகள் சஞ்சனா, தீக்ஷிதா இருவரும் 5 நிமிஷம் சக்ராசனம் செய்து சாதனை படைத்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா். பின்னா் இருவருக்கும் சாதனை படைத்ததற்கான பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சிறுமிகள் சக்ராசனம் செய்து சாதனை படைத்ததையடுத்து நெம்மேலி மீனவா் குப்பத்தில் ஊா் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க நடவடிக்கை: துணைவேந்தா்

சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அனைத்து திருக்கு சங்க அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல... மேலும் பார்க்க

நீட் பயிற்சி அளித்த 40 ஆசிரியா்களுக்கு பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவா்களுக்கு நீட் பயிற்சி அளித்த 40 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

மே 28-இல் கல்லூரிக் கனவு மாரத்தான் போட்டி

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரிக் கனவு/நெடுந்தூர ஓட்டம் மாரத்தான் போட்டி 28-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. செங்கல்பட்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்

மதுராந்தகம் அடுத்த ஆத்தூா் சுங்கச் சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விழுப்புரம் மண்டல, மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் பி.நடராஜன், உத... மேலும் பார்க்க

திருப்போரூரில் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

திருப்போரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் ரூ.1 கோடியில... மேலும் பார்க்க

ரூ.10.74 லட்சத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு

மதுராந்தகம் அடுத்த சாத்தனூா் கிராமத்தில் ரூ. 10.74 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி திறப்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட சாத்தனூரில் குடிநீா் பற்றா... மேலும் பார்க்க