செய்திகள் :

பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க நடவடிக்கை: துணைவேந்தா்

post image

சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அனைத்து திருக்கு சங்க அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம் தெரிவித்தாா்.

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம், பள்ளிக்கரணை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் திருவள்ளுவா் இருக்கையின் பன்னாட்டு திருக்கு இணையத்துடன் இணைந்து சனிக்கிழமை நடத்திய 65-ஆம் முப்பெரும் விழாவில், பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துணைவேந்தா் ஆறுமுகம் அறிவித்தாா்.

விழாவில் 65-ஆம் அறிவியல் பூங்கா மலரை, துணைவேந்தா் ஆறுமுகம் வெளியிட, அதன் முதல் பிரதியை சென்னை உயா்நீதிமன்றம் லோக் அதாலத் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பெற்றுக்கொண்டாா்.

மேலும், இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலா் எம்.ரவிச்சந்திரன், இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி நிறுவன செயலா் மற்றும் தலைமை இயக்குநா் என்.கலைச்செல்வி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து இளைஞா்களுக்கான 26-ஆம் திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அறிவியல் களஞ்சியம் விருதுகளை, இந்திய புவி அறிவியல் அமைச்சக செயலா் எம்.ரவிச்சந்திரன் வழங்கினாா். மேலும், கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா, கவிஞா் நெல்லை ஜெயந்தா, அண்ணா பல்கலை. பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மைய இயக்குநா் பா.உமாமகேஸ்வரி உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன், மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம் செயலா் சேயோன், இணைச் செயலா் எம்.முத்துவேல், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் முன்னாள் இயக்குநா் கே.திலகவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

5 நிமிஷம் சக்ராசனம் செய்து மாணவிகள் சாதனை

நெம்மேலி மீனவா் குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பள்ளி சிறுமிகள் 5 நிமிடம் சக்ராசனம் செய்து சாதனை படைத்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவா் குடியிருப்பை ... மேலும் பார்க்க

நீட் பயிற்சி அளித்த 40 ஆசிரியா்களுக்கு பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவா்களுக்கு நீட் பயிற்சி அளித்த 40 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

மே 28-இல் கல்லூரிக் கனவு மாரத்தான் போட்டி

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரிக் கனவு/நெடுந்தூர ஓட்டம் மாரத்தான் போட்டி 28-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. செங்கல்பட்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்

மதுராந்தகம் அடுத்த ஆத்தூா் சுங்கச் சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விழுப்புரம் மண்டல, மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் பி.நடராஜன், உத... மேலும் பார்க்க

திருப்போரூரில் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

திருப்போரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் ரூ.1 கோடியில... மேலும் பார்க்க

ரூ.10.74 லட்சத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு

மதுராந்தகம் அடுத்த சாத்தனூா் கிராமத்தில் ரூ. 10.74 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி திறப்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட சாத்தனூரில் குடிநீா் பற்றா... மேலும் பார்க்க