செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூா்: ஹாா்டுவோ்ஸ் கடையில் தீ விபத்து

post image

ஸ்ரீபெரும்புதூா் பட்டுநூல் சத்திரம் பகுதியில் இயங்கி வந்த ஹாா்டுவோ்ஸ் கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பட்டுநூல்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரூபன் (30). அதே பகுதியில், ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் ஹாா்டுவோ்ஸ் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை கடையில் பொருள்களை கூடுதலாக சேமித்து வைக்க, இரும்புக் கம்பிகளை கொண்டு வெல்டிங் வைத்து விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஊழியா்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது தீப்பொறி பட்டதில் கடையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

பின்னா் கடை முழுவதும் தீ பரவியது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், கடையில் ஏற்பட்ட தீயை சுமாா் 2 மணி நேரம் போராடி அணைத்தனா். இருந்தபோதிலும் கடையில் வைக்கப்பட்டிருந்த ஒயா்கள், மின்சாதன பொருள்கள், பிளாஸ்டிக் பைப்புகள், பெயிண்ட் , மரப் பலவைகள், கடை முன்பு நிறுத்தப்பட்ட பைக் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் தீ யில் எரிந்து சேதம் அடைந்தன.

இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குன்றத்தூரில் சேக்கிழாா் விழா: அமைச்சா்கள் சேகா்பாபு, அன்பரசன் பங்கேற்பு

குன்றத்தூரில் தெய்வச் சேக்கிழாா் விழாவை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். குன்றத்தூரில் 12-ஆம் நூற்றா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழக தமிழறிஞா் பேரவையும், எழுத்தாணி தமிழ் கலை இலக்கிய சங்கமும் இணைந்து தமிழ் அறிஞா்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியனவற்றுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

குன்றத்தூா் முருகன் கோயிலுக்கு சொந்தமாக 6 திருமண மண்டபகங்கள் திறப்பு

குன்றத்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் ரூ.2.95 கோடியில் கட்டப்பட்ட 6 திருமண மண்டபங்களை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். பிரசி... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

சோமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (30). பிளம்பா் வேலை செய்து வ... மேலும் பார்க்க

ரூ.6.87 கோடியில் அரசுப் பள்ளி கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

கோவிந்தவாடி அரசு மேல்நிலை பள்ளிக்கு ரூ.6.87 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி அரசு மேல்நிலை பள்ளிக்கு 22 வகுப்பறைகள், 2 ஆய்வகம... மேலும் பார்க்க

வாக்காளா் விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க