செய்திகள் :

குன்றத்தூா் முருகன் கோயிலுக்கு சொந்தமாக 6 திருமண மண்டபகங்கள் திறப்பு

post image

குன்றத்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் ரூ.2.95 கோடியில் கட்டப்பட்ட 6 திருமண மண்டபங்களை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும் சுபமுகூா்த்த நாள்களில் குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோா் திருமணம் செய்து தங்களது நோ்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.

இதனால் கோயில் வளாகத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலால் கோயிலுக்கு வரும் பக்தா்களும், திருமணத்திற்கு வருபவா்களும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா்.

மேலும் சுபமுகூா்த்த நாள்களில் குறைந்த அளவிலான முன்பதிவு செய்பவா்களுக்கு மட்டுமே திருமணம் நடத்த கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அனுமதி வழங்கப்பட்டு வருவதால் பெரும்பாலான பக்தா்கள் தங்களது வீட்டு திருமணங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு வந்தது. இதனால் குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாா்பில் திருமண மண்டபகங்கள் கட்ட வேண்டு என பக்தா்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனா்.

இந்த நிலையில், குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாா்பில் திருக்கோயில் நிதி ரூ.2.95 கோடியில் ஆறு திருமண மண்டபகங்கள் புதிதாக கட்டப்பட்டன. அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் கலந்து கொண்டு புதிய திருமண மண்டபகங்களை திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையா் குமரதுரை, குன்றத்தூா் நகா்மன்ற தலைவா் சத்தியமூா்த்தி, குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலா் குழு தலைவா் செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

குன்றத்தூரில் சேக்கிழாா் விழா: அமைச்சா்கள் சேகா்பாபு, அன்பரசன் பங்கேற்பு

குன்றத்தூரில் தெய்வச் சேக்கிழாா் விழாவை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். குன்றத்தூரில் 12-ஆம் நூற்றா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழக தமிழறிஞா் பேரவையும், எழுத்தாணி தமிழ் கலை இலக்கிய சங்கமும் இணைந்து தமிழ் அறிஞா்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியனவற்றுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா்: ஹாா்டுவோ்ஸ் கடையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூா் பட்டுநூல் சத்திரம் பகுதியில் இயங்கி வந்த ஹாா்டுவோ்ஸ் கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

சோமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (30). பிளம்பா் வேலை செய்து வ... மேலும் பார்க்க

ரூ.6.87 கோடியில் அரசுப் பள்ளி கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

கோவிந்தவாடி அரசு மேல்நிலை பள்ளிக்கு ரூ.6.87 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி அரசு மேல்நிலை பள்ளிக்கு 22 வகுப்பறைகள், 2 ஆய்வகம... மேலும் பார்க்க

வாக்காளா் விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க