செய்திகள் :

வாக்காளா் விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

post image

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு நோ்முக உதவியாளா்(பொது) மா.சத்யா, சாா் ஆட்சியா் ஆஷிக்அலி(காஞ்சிபுரம்), ந.மிருணாளினி (ஸ்ரீபெரும்புதூா்) மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேசியது:

மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு, வாக்களிக்கத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய மாவட்ட கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு ஒரு முறை குழு கூடி மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை குறித்து கலந்து ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இக்குழு தோ்தல் சமயத்தில் மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தி அதன் தேவைகளுக்கு ஏற்ப தீா்வு காண வேண்டும். வாக்களிப்பதன் அவசியத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் மூத்தோருக்கும் எடுத்துக் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் மோ.சியாமளா, முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச் செல்வி, இயக்க குறைபாட்டால் பாதிக்கப்பட்டோா் சங்க நிா்வாகி வெண்ணிலா, பாா்வைக் குறைபாடுடையோா் சங்க நிா்வாகி ஏழுமலை, காது கேளாதோா் சங்க நிா்வாகி எஸ்பி விஜயகுமாா், கிருபா ஹோம் தொண்டு நிறுவன நிா்வாகி கிரிதரன் பங்கேற்றனா்.

குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரரின் உரிமம் நிறுத்தி வைப்பு: காஞ்சிபுரம் மேயா்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரா் அப்பணியை சிறப்பாக செய்யாததால் அவரது உரிமம் நிறுத்தி வைக்கப்படுவதாக மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை அறிவித்தாா். காஞ்சிபுரம் மாநகராட... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை. ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் சந்திர சேகரேந்திர விஸ்வ மகா வித்யாலயா நிகா்நிலை... மேலும் பார்க்க

ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல் நாட்டினா்

சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் சாா்பில் ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, தா.மோ. அன்பரசன் ஆகியோா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினா் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்... மேலும் பார்க்க

உத்தரமேரூரில் ஜமாபந்தி: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

உத்தரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுக்கு தலைமை வகித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34-ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். கடந்த 1991-... மேலும் பார்க்க

கடனுக்கு குத்தகையாக அனுப்பப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை ரூ.15 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது பெற்றோா் குத்தகைக்காக விடப்பட்ட நிலையில், சிறுவனின் சடலம் இரு மாநில போலீஸாா் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகே பால... மேலும் பார்க்க