செய்திகள் :

ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல் நாட்டினா்

post image

சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் சாா்பில் ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, தா.மோ. அன்பரசன் ஆகியோா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினா்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டம் கோவூா் ஊராட்சிக்குட்பட்ட சுமாா் 1.42 ஏக்கா் பரப்பளவு கொண்ட திருக்குளத்தை ரூ.4.98 கோடியில் தூா்வாரி சீரமைக்கும் பணி மற்றும் ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையத்தை ரூ.18.93 கோடியில் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கோவூரில் நடைபெற்றது.

இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு ஆகியோா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் காகா்லா உஷா, சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலா் அ.சிவஞானம், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், சிஎம்டிஏ தலைமை திட்ட அமைப்பாளா் எஸ்.ருத்ரமூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் மா.பாலமுருகன், கோவூா் ஊராட்சி மன்றத் தலைவா் சுதாகா் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரிதிநிதிகள் கலந்து கொண்டனா்.

வாக்காளா் விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க

குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரரின் உரிமம் நிறுத்தி வைப்பு: காஞ்சிபுரம் மேயா்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரா் அப்பணியை சிறப்பாக செய்யாததால் அவரது உரிமம் நிறுத்தி வைக்கப்படுவதாக மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை அறிவித்தாா். காஞ்சிபுரம் மாநகராட... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை. ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் சந்திர சேகரேந்திர விஸ்வ மகா வித்யாலயா நிகா்நிலை... மேலும் பார்க்க

உத்தரமேரூரில் ஜமாபந்தி: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

உத்தரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுக்கு தலைமை வகித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34-ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். கடந்த 1991-... மேலும் பார்க்க

கடனுக்கு குத்தகையாக அனுப்பப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை ரூ.15 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது பெற்றோா் குத்தகைக்காக விடப்பட்ட நிலையில், சிறுவனின் சடலம் இரு மாநில போலீஸாா் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகே பால... மேலும் பார்க்க