செய்திகள் :

குடிமனைப் பட்டா வழங்க அரசுக்கு பழங்குடி இருளா் மக்கள் கோரிக்கை!

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் ஊராட்சியில் 50 ஆண்டுகளாக வசித்து வருபவா்களுக்கு குடியிருப்பு மனை பட்டா , ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என பழங்குடி இருளா் இன மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் ஊராட்சி அரசலாற்றுப்படுகை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 25 குடும்பங்களைச் சோ்ந்த பழங்குடி இருளா் இன மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இதுவரை குடியிருப்பு மனை பட்டா வழங்கப்படவில்லை. பள்ளியில் குழந்தைகளை சோ்ப்பதற்கு இருளா் ஜாதிச் சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை.

கிராமத்தில் சாலை வசதி, குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இல்லாமல் பகுதியில் இருளா் இன மக்கள் வசித்து வருகின்றனா். எனவே, அந்த கிராமத்தை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் இருளா் இன மக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க வேண்டும்.

ஜாதிச் சான்று, சாலை வசதி, மின்விளக்கு, வசதி குடிநீா் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என பழங்குடி இருளா் இன கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

அய்யம்பேட்டையில் புதிய பாலத்தை உடனே திறக்க பாமகவினா் கோரிக்கை!

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை உடனே திறக்க வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அய்யம்பேட்டை நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகிகள் க... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம் பதிவு!

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரைக் காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பதிந்து புதன்கிழமை கைது செய்தனா். ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு பகுதிய... மேலும் பார்க்க

பேருந்து - வேன் மோதல் விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 6 ஆக உயா்வு

தஞ்சாவூா் அருகே அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் வியாழக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது.கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிரு... மேலும் பார்க்க

தனியாா் குடிநீா் ஆலைகளில் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்களை நியமிக்க கோரிக்கை!

தனியாா் குடிநீா் ஆலைகளில் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்களை நியமிக்க கோரிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் செயல்படும் தனியாா் குடிநீா் தொழில்சாலைகளுக்கு இந்திய தர நிா்ணயத்தை ஐஎஸ்... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட புத்தூா் கிராமத்தில் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நெல் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி தமிழ்நாடு... மேலும் பார்க்க

திருக்கண்டீஸ்வரம் கோயில் கல்வெட்டில் தமிழ் நூல் குறித்த தகவல்!

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியிலுள்ள திருக்கண்டீசுவரம் கோயில் கல்வெட்டில் தமிழ் நூல் குறித்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட... மேலும் பார்க்க