செய்திகள் :

ரூ. 10 ஊக்கத்தொகையுடன் வேலை! நிறுவனத்தை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

post image

மும்பையை சேர்ந்த நிறுவனத்தில் ரூ. 10 ஊக்கத்தொகையுடன் வேலை இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு, சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு இருப்பதாக, அந்நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டது.

ஆனால், வெறும் ரூ. 10 மட்டுமே ஊக்கத்தொகையாக அவர்கள் குறிப்பிட்டிருந்ததுதான் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது. மேலும், இந்த வேலையின் தகுதிகளாக பலவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி, இந்த வேலைக்கு சுமார் 2000 பேர்வரையில் விண்ணப்பித்ததுதான் பெருங்கொடுமை என்றும் சிலர் பரிதாபச் சிரிப்புடன் கருத்துகளைப் பதிவிட்டனர்.

இதுகுறித்து, எக்ஸ் பயனர்களில் ஒருவர் தெரிவித்ததாவது, இவ்வளவு பணத்தை எப்படி செலவழிப்பது? என்று கருத்து பதிவிட்டார்.

மற்றொருவர், 10-க்கு அருகில் `கே’-வை (10K) உள்ளிட அந்த நிறுவனம் மறந்து விட்டதா? அல்லது மறுத்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ஒருவர், `இதற்கு இலவசமாக சேர்ந்து விடலாமே’ என்றும் கூறினார்.

வேகமெடுக்கும் கரோனா பரவல்?ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு பாதிப்பு!

ஹரியாணா மாநிலத்தில் புதியதாக 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஹரியாணாவின் குருகிராமம் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்றுபட... மேலும் பார்க்க

கேரளம்: பலத்த காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்த பெரிய இரும்பு கூரை

திருச்சூரில் பலத்த காற்றுக்கு பெரிய இரும்பு கூரை ஒன்று பறந்து சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் நகரில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது ... மேலும் பார்க்க

உ.பி.யில் மழை தொடர்பான சம்பவங்கள் 49 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 49 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மே 21-22 இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நில... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள்... மேலும் பார்க்க

43 ஆண்டுகள் கழித்து 104 வயதில் விடுதலையான ஆயுள் தண்டனைக் கைதி!

உத்தரப் பிரதேசத்தில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி ஒருவர் 43 ஆண்டுகள் கழித்து, தனது 104 வயதில் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.கௌஷம்பி மாவட்டத்தின் கௌராயி கிராமத்தைச் சேர்ந்தவர் லங்கன் (வயது 1... மேலும் பார்க்க