செய்திகள் :

ஜிஎன்எஃப்சி நிறுவனத்தின் 4-வது காலாண்டு லாபம் 62% உயர்வு!

post image

புதுதில்லி: குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட், மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 62 சதவிகிதம் அதிகரித்து ரூ.211 கோடியாக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் அதன் நிகர லாபம் ரூ.130 கோடியாக இருந்தது. அதே வேளையில் கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.2,218 கோடியிலிருந்து ரூ.2,177 கோடியாகக் குறைந்துள்ளது.

2024-25 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டு ரூ.497 கோடியிலிருந்து ரூ.597 கோடியாக அதிகரித்துள்ளது.

2023-24 நிதியாண்டில் ரூ.8,399 கோடியாக இருந்த மொத்த வருமானம் கடந்த நிதியாண்டு ரூ.8,393 கோடியாகக் குறைந்துள்ளது.

மேம்பட்ட விளைவுகள் பலனாக தீவனம் அதிகரிப்பும், அதே வேளையில் எரிபொருள் விலை லாபத்தை மேம்படுத்த உதவியதாக தெரிவித்தார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி. நடராஜன்.

குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட், குஜராத் அரசு மற்றும் குஜராத் மாநில உரங்கள் மற்றும் ரசாயனங்கள் லிமிடெட் ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு கூட்டுத் துறை நிறுவனமாகும்.

இதையும் படிக்க: ரூபாய் மதிப்பு 70 காசுகள் உயர்ந்து ரூ.85.25-ஆக முடிவு!

அசோக் லேலண்டின் நிகர லாபம் புதிய உச்சம்

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும் அந்த நிதியாண்டு முழுமையிலும் அதிகபட்ச நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 70 காசுகள் உயர்ந்து ரூ.85.25-ஆக முடிவு!

மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வரவு, பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு ஆகிய காரணங்களால், இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு நவம்பர் 2022க்குப் பிறகு ஒரே நாளி... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 760 புள்ளிகளுக்கு மேல் உயர்வு; எஃப்எம்சிஜி, பவர் பங்குகள் ஏற்றம்!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன. டாப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிசி ந... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்ந்தது!

நேற்று சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை இன்று(மே 23) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,897 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.50 மணியளவில், செ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்!

இந்திய பங்குச் சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, 411 புள்ளி... மேலும் பார்க்க

பங்குச் சந்தை கடும் சரிவு! 1,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,323.05 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் பிற்பகல் 12.55 மணி நிலவரப்ப... மேலும் பார்க்க