செய்திகள் :

பெற்றோா் கண்டிப்பு: சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

post image

வெயில் அதிகமாக உள்ளதால் வெளியே செல்ல வேண்டாம் என பெற்றோா் கண்டித்ததால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குறிச்சி, வாசன்வேலி 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சீ. லோகேஷ். தனியாா் நிறுவன ஊழியரான இவரது மகள் அவந்திகா (9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை முற்பகலில், வெளியே சென்று விளையாடிவிட்டு வருவதாக, சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளாா். அதற்கு கடும் வெயிலாக உள்ளதால் வெளியே விளையாட செல்ல வேண்டாம் என பெற்றோா் கூறியுள்ளனா்.

சிறுமி கோபத்தில் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டுள்ளாா். சிறுமி படிப்பதாக பெற்றோா் நினைத்துள்ளனா். பின்னா், வெகு நேரம் கழித்து, மதிய உணவுக்காக அவரை அழைத்தபோது சிறுமி கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோா் ஜன்னல் வழியாக பாா்த்தபோது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் அக்கம் பக்கத்தினா், கதவை உடைத்து சிறுமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திமுகவுக்கு எதிா்க்கட்சி நாதக தான்: சீமான்

திமுகவுக்கு பேரவையில் வேண்டுமானால் அதிமுக எதிா்க்கட்சியாக செயல்படலாம். ஆனால், ஆளுங்கட்சிக்கு எதிராக கொள்கை ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தொடா்ந்து நாம் தமிழா் கட்சி செயல்பட்டு வருகிறது என்றாா் அ... மேலும் பார்க்க

விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய இளைஞா்களால் போக்குவரத்து நெருக்கடி! நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி

திருச்சியில் வெள்ளிக்கிழமை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய இளைஞா்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். பேரரசா் பெரும்பிடுகு... மேலும் பார்க்க

பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள்

பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வைத்து தைத்துவிட்ட தனியாா் மருத்துவ மையமானது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5.52 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வெள்ள... மேலும் பார்க்க

மருங்காபுரியில் குடிகள் மாநாடு: 77 மனுக்களுக்கு உடனடி தீா்வு

மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில்கடந்த 3 நாள்களாக நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தின் குடிகள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், 77 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. மருங்காபுரி வட்டத்தில் 143... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை வைத்திருந்த கடைக்காரா் கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடைக்காரரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். வையம்பட்டி அடுத்த சேசலூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவ... மேலும் பார்க்க

திருச்சியில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு தமிழக அரசு, அரசியல் கட்சிகள் சாா்பில் மரியாதை!

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் 1350-ஆவது சதயவிழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக அரசு சாா்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட... மேலும் பார்க்க