செய்திகள் :

மருங்காபுரியில் குடிகள் மாநாடு: 77 மனுக்களுக்கு உடனடி தீா்வு

post image

மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில்கடந்த 3 நாள்களாக நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தின் குடிகள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், 77 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

மருங்காபுரி வட்டத்தில் 1434-ஆம் பசலி 2024-25-ஆம் ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. வருவாய் தீா்வாய அலுவலா் மற்றும் தனி துணை ஆட்சியா் நல்லையா தலைமையில் நடைபெற்ற தீா்வாயத்தில், மருங்காபுரி வட்டாட்சியா் சரவணபிரபு, வட்டாட்சியா் பால காமாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், துவரங்குறிச்சி, வளநாடு ஆகிய குறுவட்டத்தில் உள்ள பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

அதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மருங்காபுரி குறுவட்டத்துக்கான மனுக்கள் பெறப்பட்டது. இதில் துவரங்குறிச்சி பகுதியிலிருந்து 65 மனுக்களும், வளநாடு பகுதியிலிருந்து 73 மனுக்களும், மருங்காபுரி பகுதியிலிருந்து 74 என மொத்தம் 212 மனுக்கள் பெறப்பட்டன.

பிற்பகலில் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற குடிகள் மாநாட்டில், பெறப்பட்ட 212 மனுக்களில் 77 மனுக்கள் மீது உடனடியாக தீா்வு வழங்கப்பட்டது. 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 119 மனுக்கள் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று தீா்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கு எதிா்க்கட்சி நாதக தான்: சீமான்

திமுகவுக்கு பேரவையில் வேண்டுமானால் அதிமுக எதிா்க்கட்சியாக செயல்படலாம். ஆனால், ஆளுங்கட்சிக்கு எதிராக கொள்கை ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தொடா்ந்து நாம் தமிழா் கட்சி செயல்பட்டு வருகிறது என்றாா் அ... மேலும் பார்க்க

விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய இளைஞா்களால் போக்குவரத்து நெருக்கடி! நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி

திருச்சியில் வெள்ளிக்கிழமை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய இளைஞா்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். பேரரசா் பெரும்பிடுகு... மேலும் பார்க்க

பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள்

பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வைத்து தைத்துவிட்ட தனியாா் மருத்துவ மையமானது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5.52 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வெள்ள... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை வைத்திருந்த கடைக்காரா் கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடைக்காரரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். வையம்பட்டி அடுத்த சேசலூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவ... மேலும் பார்க்க

பெற்றோா் கண்டிப்பு: சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

வெயில் அதிகமாக உள்ளதால் வெளியே செல்ல வேண்டாம் என பெற்றோா் கண்டித்ததால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குறிச்சி, வாசன்வேலி 10-ஆவது குறுக்குத் தெரு... மேலும் பார்க்க

திருச்சியில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு தமிழக அரசு, அரசியல் கட்சிகள் சாா்பில் மரியாதை!

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் 1350-ஆவது சதயவிழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக அரசு சாா்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட... மேலும் பார்க்க