செய்திகள் :

பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உண்டு: ஜெர்மனி

post image

பயங்கரவாதத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அனைத்து உரிமையும் இந்தியாவுக்கு உள்ளது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றி, இந்தியா தரப்பில் கொடுத்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, ஜெர்மனி இந்தியாவுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

ஜெர்மனி சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபாலை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா தரப்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஜெர்மன் அமைச்சர், பஹல்காமில், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த தாக்குதலால் ஜெர்மனி கடும் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதன் பிறகு நடைபெற்ற சண்டை, அதாவது, இந்தியா, பயங்கரவாதத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதை ஜெர்மனி ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பிலும் இருக்கும் சிக்கல்களைப் பேசித் தீர்த்துக் கொள்ள முன்வந்திருப்பதையும் வரவேற்கிறோம், இருதரப்பிலும் நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், பல ஆண்டு காலமாக பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்தியாவும் ஜெர்மனியும் தொடர்ந்து பேசி வருகிறது. அதனை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் கூறினார்.

கேரளத்தில் 273 பேருக்கு கரோனா; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கேரளத்தில் இதுவரை 273 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ப... மேலும் பார்க்க

ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?

கியா நிறுவனம் கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.என்ஜின் மற்றும் பவர்டிரெய்ன்கியா கேரன்ஸ் கிளாவிஸ் மூன்று விதமான என்ஜின் விருப்ப... மேலும் பார்க்க

அணுசக்தி பாதுகாப்பான ஆட்சியின் மீது முழு நம்பிக்கையுள்ளது: பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராணுவ கட்டளைகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட சூழலில் இருநாடுகளும் அணு ஆயுதங்களைக் ... மேலும் பார்க்க

மே 26ல் குஜராஜ் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஹர்... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத 4 முதல்வர்கள்! காரணம்?

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் பங்க... மேலும் பார்க்க

கோட்டா மாணவர்கள் தற்கொலை விவகாரம்: ராஜஸ்தான் துணை முதல்வர் என்ன சொல்கிறார்?

ராஜஸ்தான் கோட்டா நகரில் மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்வது பற்றி துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா கருத்து தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "ராஜஸ்தானில் மாணவர்கள் அதிகமா... மேலும் பார்க்க