செய்திகள் :

மே 26ல் குஜராஜ் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

post image

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி..

பிரதமர் மோடி குஜராத்துக்கு வருகிற 26,27 ஆகிய இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். காந்தி நகரின் மகாத்மா மந்திரில் நடைபெறும் நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டுக்கான அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் வருகை மாநில மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை வரவேற்க மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து மாநிலத்தில் ரூ.82,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.

பூஜ் நகரில் ரூ. 53,414 கோடி மதிப்பிலான 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். மேலும் குஜராத் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பயணடையும் வகையில், ஆஷாபுரா ஆன்மிக மையத்தில் வளர்ச்சி பணிகளையும் தொடங்கிவைக்க உள்ளார்.

கட் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆன்மிக மையத்தின் வளாகம் ரூ.32.71 கோடி மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை மாநில அரசு மற்றும் குஜராத் பவித்ர யாத்ராதம் விகாஸ் வாரியம் இணைந்து மேற்கொண்டது. இது தற்போது நிறைவடைந்துள்ளது. ஆஷாபுரா மாதா கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கான மேம்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் எஸ்பி அறிமுகம்! வியக்கவைக்கும் விலையில்..!

கம்யூட்டர் மற்றும் பந்தய பைக்குகளுக்கு பெயர்பெற்ற ஹோண்டா நிறுவனம் ஹார்னெட் மாடலில் 1000 சிசி கொண்ட புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு காணலா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை! பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலத்தின் ஏராளமான மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அம்மாநிலம்... மேலும் பார்க்க

உ.பி.யில் சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயம்

உ.பி.யில் சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை, இளைஞர் ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு காயமடைந்தார். பின... மேலும் பார்க்க

குஜராத்: பாகிஸ்தான் உளவாளியிடம் தகவல்களைப் பகிர்ந்தவர் கைது!

எல்லையில் அமைந்துள்ள குஜராத்தின் கச்சு மாவட்டத்தில், பாகிஸ்தான் உளவாளியிடம் தகவல்களைப் பகிர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கச்சு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஹ்தேவ்சின் கோஹில் (வயது 28), சு... மேலும் பார்க்க

கேரளத்தில் 273 பேருக்கு கரோனா; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கேரளத்தில் இதுவரை 273 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ப... மேலும் பார்க்க

ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?

கியா நிறுவனம் கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.என்ஜின் மற்றும் பவர்டிரெய்ன்கியா கேரன்ஸ் கிளாவிஸ் மூன்று விதமான என்ஜின் விருப்ப... மேலும் பார்க்க