செய்திகள் :

`பேன்ட் அளவு சரியில்லை' - டெய்லரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற இளைஞர்... குமரி `பகீர்'

post image

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி,  திட்டுவிளை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(65). இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் பெண்களுக்கான தையலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவு தனது டெய்லரிங் கடைக்குள் கத்தரிக்கோலால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நாகர்கோவிலில் தனியார் விடுதியில் பதுங்கி இருந்த சந்திரமணி (38) என்பவரை கைதுசெய்தனர். அவர் டெய்லரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கைதான சந்திரமணி தூத்துக்குடி மாவட்டம் சேதுங்க நல்லூர்,  கோவில் பத்து பகுதியை சேர்ந்தவர் ஆவர். அவர் நாகர்கோவிலில் தங்கியிருந்து ஒரு தனியார் ஓட்டலில் வேலைசெய்துவந்தார்.

கொலையான டெய்லர் செல்வம்

கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் சந்திரமணி தனது பேண்ட் ஒன்றை அளவு சரிசெய்து வழங்குமாறு டெய்லர் செல்வத்திடம் கொடுத்த்துள்ளார். அதை டெய்லர் செல்வம் சரிசெய்ததும் நேற்று முன் தினம் மாலை 4 மணியளவில் சந்திரமணி அதை வாங்கிச்சென்றார். பின்னர் சுமார் 6.45 மணியளவில் மீண்டும் டெய்லர் கடைக்கு வந்த சந்திரமணி, பேண்ட் அளவு சரியாக இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் டெய்லர் செல்வத்துக்கும், ஓட்டல் ஊழியர் சந்திரமணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக  மாறி உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சந்திரமணி  கடையில் துணி வெட்டுவதற்காக மேசையில் வைத்திருந்த  கத்தரிகோலை எடுத்து  கடையின் உரிமையாளரான செல்வத்தை காது அருகில்  மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் டெய்லர் செல்வம் சரிந்தார். சந்திரமணி அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் டெய்லர் செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கொலை வழக்கில் கைதான ஓட்டல் ஊழியர் சந்திரமணி

இது குறித்து போலீஸார் கூறுகையில், "டெய்லர் கொலை வழக்கில் சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினோம். அதில் சந்திரமணி பதற்றத்துடன் டெய்லர் கடையில் இருந்து வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அடுத்தடுத்து பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் சந்திரமணி தனியார் விடுதிக்கு செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி-யில் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் விடுதியில் பதுங்கியிருந்த சந்திரமணியை கைதுசெய்தோம்" என்றனர்.

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; பள்ளி மாணவியுடன் லாட்ஜில் தங்கிய இளைஞர் கைதான பின்னணி!

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென மாயமனார். அவரைக் கண்டுபிடித்து தரும்படி மாணவி தரப்பில் ஆவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க

போதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி போலீஸில் சரண் - மதுவால் நடந்த விபரீதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரசமர தெருவைச் சேர்ந்த ராஜா இவரது மகன்கள் அஜித்குமார் (27) டிப்ளமோ படித்துள்ளார். ராம்குமார் (25) டூ விலர் மெக்கானிக். ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் சிக்கியது எப்படி?

மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக... மேலும் பார்க்க