செய்திகள் :

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

post image

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று நேற்று முன்தினம் வந்துள்ளது.

வேலுமணி வீடு

அதில், “ஜூலை 30 ம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வைக்க உள்ளோம். நாங்கள் உங்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய நபர்கள் உங்கள் அருகில் உள்ளனர். எங்கள் அமைப்புக்கு பணம் வேண்டும். காவல்துறையிலும் எங்கள் ஆள்கள் பணியாற்றுகிறார்கள்.

உங்களிடம் நிறைய கறுப்புப் பணம் இருக்கிறது. அதற்கு எங்களிடம் ஆதாரங்கள்  நிறைய உள்ளன. எங்களுடைய அமைப்புக்கு 25-ம் தேதி மதியம் ரூ.1 கோடி  பணம் கொடுக்க வேண்டும் . காளப்பட்டி - வெள்ளானைபட்டி சாலையில் உள்ள குப்பை மேட்டில் பணத்தை வைக்க வேண்டும். நீங்களோ அல்லது உங்கள் டிரைவரோ வரலாம்.

கோவை
கோவை

எங்கள் ஆள்கள் பணப்பையை எடுத்துவிடுவார்கள். நேரத்தை தவறவிடாதீர்கள். நாங்கள் சொல்வதை கேட்காமல் காவல்துறைக்கு சென்றாலோ, எங்களை பிடிக்க முயற்சி செய்தாலோ உங்கள் குடும்பத்தில் உள்ள 3 பேரை 3 மாதங்களில் கொலை செய்வோம்.

பணப்பையில் ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ் வைக்க வேண்டாம். இது வெறும் மெசேஜ் அல்ல. எச்சரிக்கை. அல்லாஹ் அக்பர். பாகிஸ்தான் ஜிந்தாபாத்.” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடிதத்தின் பின் பக்கத்தில் கூகுள் மேப் வரைபடம் ஒன்றை வைத்து அதில், ‘Drop The Bag Here’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்

இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞரணி மாநில செயலாளர் தாமோதரன், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். வேலுமணிக்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் சிக்கியது எப்படி?

மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக... மேலும் பார்க்க

கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை - பள்ளி மாணவர்கள் உதவியோடு உடலை காட்டில் எரித்த பெண் பிரின்சிபால்

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அருகில் உள்ள செளசாலா வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கடந்த 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் எரிந்து கிடந்... மேலும் பார்க்க

அரியலூர்: பச்சிளங்குழந்தை கழிவறைக்குள் அமுக்கி கொலை; இளம் பெண் கைது; பகீர் பின்னணி என்ன?

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ்.இவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு, க... மேலும் பார்க்க

``அம்மா நான் திருடல" - உயிரைப் பறித்த 3 சிப்ஸ் பாக்கெட்; குமுறும் பெற்றோர் - என்ன நடந்தது?

மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூரின் பன்சுரா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ். 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனான இவர் மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், கோசைன்பர் சந்தையில் இருக்கும் ஒ... மேலும் பார்க்க