செய்திகள் :

வேகமெடுக்கும் கரோனா பரவல்?ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு பாதிப்பு!

post image

ஹரியாணா மாநிலத்தில் புதியதாக 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

ஹரியாணாவின் குருகிராமம் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்றுபட்டுள்ளது உறுதியாகியதாக இன்று (மே 23) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2 ஆண்கள் மற்றும் 2 பெண்களுக்கு இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை ஓமிக்ரான் வகை கரோனா வைரஸ் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், அவர்கள் 4 நால்வரும் வெளிநாடுகள் எதற்கும் பயணம் செய்யதவர்கள் எனவும் ஏற்கனவே கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் என்பதும் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. மேலும், லேசான அறிகுறிகள் மட்டுமே அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் 4 பேரும் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்த்தி சிங் ராவ் கூறுகையில், மாநில சுகாதாரத் துறை இந்தப் பரவலை தீவிரமாகக் கவனித்து வருவதாகவும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:

”மக்கள் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை. இந்த வகை கரோனா வைரஸ் லேசான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்தும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துவது சுலபம். மேலும், இந்திய அரசு வெளியிட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் நாங்கள் தவறாமல் பின்பற்றி வருகிறோம். எனவே, குடிமக்கள் அனைவரும் கோவிட் நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹரியாணாவிலுள்ள அனைத்து பொது மருத்துவர்களுக்கும், தேவையான அத்தியாவசிய மருந்துக்கள் மற்றும் மருத்துவ வசதிகள் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, குருகிராம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான ஒருவர் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் இந்தப் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:கேரளம்: பலத்த காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்த பெரிய இரும்பு கூரை

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா். தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இ... மேலும் பார்க்க

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா். நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க