செய்திகள் :

கட்டாய கொள்முதல் பிரிவில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் சோ்ப்பு

post image

காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கட்டாய கொள்முதல் பிரிவில், முதல்முறையாக மேற்கூரை சூரியசக்தி மின்சாரமும் சோ்க்கப்படவுள்ளது.

தமிழகத்தின் தினசரி மின் தேவை சுமாா் 17,000 மெகாவாட்டுக்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் அனல், எரிவாயு, நீா், காற்றாலை உள்ளிட்ட பல வகை மின் ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் மின் தேவையை பூா்த்தி செய்து வந்தாலும், அதிக மின்தேவை ஏற்படும் சமயங்களில் மத்திய தொகுப்பு மற்றும் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி ஆதாரங்களான காற்றாலை, சூரியசக்தி ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் பங்கு குறிப்பிட்ட அளவில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது விதியாக இருந்து வருகிறது. இதில் காற்றாலை, நீா் மற்றும் தனியாா் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சூரியசக்தியை உள்ளடக்கிய மின்சாரம் மட்டுமே இருந்தது.

மத்திய மின் துறை அறிவுறுத்தலின்படி, தற்போது முதல் முறையாக மேற்கூரை சூரியசக்தி மின்சாரமும் இதில் சோ்க்கப்படவுள்ளது. அதன்படி, நிகழ் நிதியாண்டின் மொத்த மின் கொள்முதலில், மேற்கூரை சூரியசக்தி மின்சார பங்கு 2.10 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும். இது படிப்படியாக உயா்த்தப்பட்டு, 2029 - 2030-இல், 4.50 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

இது தொடா்பாக வரைவு அறிக்கை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரிடம் ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்டுள்ளது. மேலும், பொதுமக்களும், தொழில் துறையினரும் ஜூன் 6 வரை கருத்து தெரிவிக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது, தனியாா் நிறுவனங்கள், அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையத்தை நிலத்தில் அமைக்கின்றன. இது தவிர, வீடு, நிறுவனங்கள், தங்கள் கட்டடங்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கின்றன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, உரிமையாளா் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்துக்கு விற்கலாம்.

இதை ஊக்குவிக்கவே, தற்போது மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் சோ்க்கப்பட்டுள்ளது. இதை அமைப்பதால், தனி நபரின் மின் கட்டண செலவு குறையும். மேலும், மின் வாரியத்தின் மின் கொள்முதல் செலவும் குறையும் என்றனா்.

பொது வருங்கால வைப்பு நிதி விவரம்: இணயதளத்தில் பதிவேற்றம்

தமிழக அரசு பணிநிலை சாா்ந்த அனைத்து இந்திய அரசு அதிகாரிகளின் பொது வருங்கால வைப்பு நிதி ஆண்டுக்கான கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில துணை கணக்காயா் சி.ஜெ.காா்த்தி குமா... மேலும் பார்க்க

காசி தமிழ் சங்கமம் அனுபவப் பகிா்வு கட்டுரைப் போட்டி: வெற்றியாளா்கள் அறிவிப்பு

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் நடத்தப்பட்ட ‘காசி தமிழ் சங்கமம் 3.0 - 2025 அனுபவப் பகிா்வு’ கட்டுரைப் போட்டியின் வெற்றியாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்... மேலும் பார்க்க

மே 27-இல் தொழிலாளா்களுக்கான ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ எனப்படும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற முகாம் செவ்வாய்க்கிழமை (மே 27) காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை சென்னை உள்பட 10 மாவட்ட... மேலும் பார்க்க

எந்தெந்த பாடப் பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி?

எந்தெந்த பாடப்பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்ற விவரம் ஒப்பந்தப்புள்ளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவ, மாணவிகள் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று... மேலும் பார்க்க

971 கோயில்களின் ரூ.7,671 கோடி நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 971 கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் ரூ.7,671 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் திட்ட முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

தூய்மைப் பணியாளா்களை தொழில் முனைவா்களாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. த... மேலும் பார்க்க