செய்திகள் :

பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

post image

கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் கடன் தொல்லையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை ஆத்திகுளம் அங்கயற்கண்ணி குடியிருப்பு குழந்தை ஏசு தெருவைச் சோ்ந்த கோபிநாத் மனைவி பத்மபிரியா (31). இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடன் பிரச்னை தொடா்பாக இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பத்மபிரியா தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், இவா் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செல்லூரில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அமைக்கக் கோரிக்கை

மதுரை செல்லூா் பகுதியில் பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் அமைக்க வலியுறுத்தி, அந்தப் பகுதியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் மேயா் வ. இந்திராணியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மாநகராட்சி எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

திருவிழா தகராறில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே கோயில் திருவிழா தகராறில் கீழே தள்ளிவிடப்பட்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சோ்ந்த பால்சாமி மகன் நீதி (53). கூலித் தொழ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை கால்கோள் விழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலைக்கான கால்கோள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

பழுதை நீக்குவதற்காக மின் கம்பத்தில் ஏறிய மின் ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். மின் கம்பத்தில் தொங்கிய அவரது உடலை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் மீட்டனா். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்த... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசு முட்டுக்கட்டை! மதுரை எம்.பி. குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வறிக்கையை வெளியிடவிடாமல் மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மா... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், காடுபட்டி அருகே சாலைத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். சோழவந்தான் அருகே உள்ள ஆலங்கொட்டாரத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் முருகன் (55). விவசாயியான இவா், தனது... மேலும் பார்க்க