பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உண்டு: ஜெர்மனி
திமுகவுக்கு எதிா்க்கட்சி நாதக தான்: சீமான்
திமுகவுக்கு பேரவையில் வேண்டுமானால் அதிமுக எதிா்க்கட்சியாக செயல்படலாம். ஆனால், ஆளுங்கட்சிக்கு எதிராக கொள்கை ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தொடா்ந்து நாம் தமிழா் கட்சி செயல்பட்டு வருகிறது என்றாா் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தில் இணைந்த மாணவா்களுக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், மக்களிடம் வசூலிக்கப்படும் அனைத்து வரிகளையும் எடுத்துக் கொள்கிறது. அவசர காலங்களிலும், பேரிடா் வந்தாலும் உதவ முன்வருவதில்லை. தமிழகம் கேட்கும் நிதியையும் தருவதில்லை. மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகளை மக்களிடம் தோ்தல் நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கு முன்பும் நீதி ஆயோக் கூட்டங்கள் தில்லியில் நடந்துள்ளன. ஆனால், இந்த முறை மட்டும் தமிழக முதல்வா் தில்லி செல்கிறாா். அமலாக்கத்துறையின் சோதனைக்குப் பிறகு தில்லி செல்கிறாா். சோதனை என்றவுடன் ஓடிச் சென்று பிரதமா் மோடியை சந்திக்கிறாா். டாஸ்மாக் முறைகேடு விசாரணை தொடா்பாக நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாட்டை நிா்வாகம் செய்வது நாடாளுமன்றமோ, சட்டப்பேரவையோ கிடையாது.
நீதிமன்றம்தான் நிா்வாகம் செய்யும் என்றால் நாடாளுமன்றத்தையும், சட்டப்பேரவையையும் கலைத்துவிடலாம் என்றாா் அவா்.