செய்திகள் :

`ஹெல்மெட் அணியாமல், அனுமதி பெறாமல் பைக் பேரணி' - காங். எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு, அபராதம்

post image

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு 34 ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பளுகலில் இருந்து குழித்துறை சந்திப்பு வரை பைக் பேரணி நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த பைக் பேரணிக்கு விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் தலைமை வகித்தார்.

கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கண்ணுமாமூடு, புத்தன்சந்தை, மேல்புறம், கழுவன்திட்டை வழியாக குழித்துறை சந்திப்பு வரை இருசக்கர பேரணி நடத்தினர்.

பின்னர் ராஜிவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் தேசிய பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

காங்கிரஸ் பைக் பேரணி

அதே சமயம் பைக் பேரணியில் கலந்துகொண்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பத்ர்ட் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார்.

மேலும் பைக் பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் ஹெல்மெட் அணியாமல் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட்டிற்கு போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

ஹெல்மெட் அணியாமல் பைக் பேரணி சென்ற தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ

இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், அதையும் மீறி பைக் பேரணி நடத்தியதாக போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பளுகஸ் போலீஸ் எஸ்.ஐ இந்துசூடன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

Niti Aayog: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலின் பங்கேற்பு; மம்தா, சித்தராமையா புறக்கணிப்பு..

டெல்லியில் இன்று( மே 24) 10 -வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இந்தநிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க

``திமுக ஆட்சியில் இதுவரை 18,200 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு..'' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

தஞ்சாவூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்தஞ்சாவூரில் அதிமுக சார்பில், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் சம்பவங்களை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆர... மேலும் பார்க்க

``நாங்கள் அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க காரணம்..'' - IMF சொன்ன விளக்கம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடந்து கொண்டிருந்த சமயத்தில், பாகிஸ்தானுக்கு இரண்டாம் கட்ட கடன் தவணையான 1 பில்லியன் டாலரை விடுவித்தது சர்வதேச நாணய நிதியம் (IMF). இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெ... மேலும் பார்க்க

Switzerland: நிலச்சரிவு முன் எச்சரிக்கை, மீட்பு பணிகள்; ஹெலிகாப்டரில் பறந்த மாடு.. வைரல் வீடியோ

சுவிட்சர்லாந்தின் ஆல்பைன் என்ற மலைத்தொடருக்கு அருகே உள்ள கிராமத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் இருந்த மக்களை வெளியேற்ற ... மேலும் பார்க்க

``ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் இருந்து போயிடுங்க'' - மாணவர்களை மிரட்டும் ட்ரம்ப் அரசு; என்ன காரணம்?

'அமெரிக்க அரசுக்கும், அதன் கொள்கைகளுக்கும் எதிராக யாரும் குரல் கொடுக்கக்கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதன் விளைவாக, சில மாதங்களுக்கு முன்பு, "அமெரிக்காவில் படிக்கும் ம... மேலும் பார்க்க

Doctor Vikatan: குடும்பத்தில் அனைவருக்கும் உடல்பருமன்... பரம்பரையாக பாதிக்குமா இந்தப் பிரச்னை?

Doctor Vikatan:உடல்பருமன் என்பது பரம்பரையாகத் தொடருமா? சில குடும்பங்களில் எல்லோரும் பருமனாகக் காட்சியளிப்பது ஏன். இவர்கள் உடல் பருமனை குறைப்பது சாத்தியமே இல்லையா.?பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர... மேலும் பார்க்க