செய்திகள் :

``நாங்கள் அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க காரணம்..'' - IMF சொன்ன விளக்கம்

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடந்து கொண்டிருந்த சமயத்தில், பாகிஸ்தானுக்கு இரண்டாம் கட்ட கடன் தவணையான 1 பில்லியன் டாலரை விடுவித்தது சர்வதேச நாணய நிதியம் (IMF). இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இந்தியாவின் எதிர்ப்பிற்கு பதில் சொல்லும் விதமாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக் பேசியுள்ளதாவது...

IMF | சர்வதேச நாணய நிதியம்
IMF | சர்வதேச நாணய நிதியம்

"நாங்கள் இரண்டாம் கட்டக் கடனை வழங்க பாகிஸ்தானுக்கு விதித்து இருந்த அனைத்து நிபந்தனைகளையும் பாகிஸ்தான் அரசு நிறைவேற்றியிருந்தது. மேலும், சில துறைகள் முன்னேற்றமும் அடைந்திருந்தது. அதனால் தான், நாங்கள் அடுத்த கட்ட கடன் தொகையை விடுவித்தோம்.

கடனுக்கான முதல் மதிப்பாய்வு 2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி, சர்வதேச நாணய நிதியமும், பாகிஸ்தான் அதிகாரிகளும் கடனின் முதல் மதிப்பாய்வு சம்பந்தமான ஒரு ஒப்பந்தந்தை மேற்கொண்டனர்.

அந்த ஒப்பந்தம் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், அதன் மதிப்பாய்வு மே 9-ம் தேதி முடிந்தது. அதன் விளைவாகத் தான், அப்போது பாகிஸ்தானுக்கு கடன் தொகை விடுவிக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையைப் பொறுத்தவரை, அந்தத் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு வருத்தங்களும், அனுதாபங்களும். இந்தப் பிரச்னை அமைதியாக தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

Switzerland: நிலச்சரிவு முன் எச்சரிக்கை, மீட்பு பணிகள்; ஹெலிகாப்டரில் பறந்த மாடு.. வைரல் வீடியோ

சுவிட்சர்லாந்தின் ஆல்பைன் என்ற மலைத்தொடருக்கு அருகே உள்ள கிராமத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் இருந்த மக்களை வெளியேற்ற ... மேலும் பார்க்க

``ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் இருந்து போயிடுங்க'' - மாணவர்களை மிரட்டும் ட்ரம்ப் அரசு; என்ன காரணம்?

'அமெரிக்க அரசுக்கும், அதன் கொள்கைகளுக்கும் எதிராக யாரும் குரல் கொடுக்கக்கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதன் விளைவாக, சில மாதங்களுக்கு முன்பு, "அமெரிக்காவில் படிக்கும் ம... மேலும் பார்க்க

Doctor Vikatan: குடும்பத்தில் அனைவருக்கும் உடல்பருமன்... பரம்பரையாக பாதிக்குமா இந்தப் பிரச்னை?

Doctor Vikatan:உடல்பருமன் என்பது பரம்பரையாகத் தொடருமா? சில குடும்பங்களில் எல்லோரும் பருமனாகக் காட்சியளிப்பது ஏன். இவர்கள் உடல் பருமனை குறைப்பது சாத்தியமே இல்லையா.?பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர... மேலும் பார்க்க

Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசமான பாஜக நிர்வாகி

அமிர்த பாரத் (Amrit Bharat Station) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக, அந்த திட்டத்தின் கீழ் புனரமை... மேலும் பார்க்க

இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?

90's கிட்டோ , 2K கிட்டோ இன்றைய இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் பிரச்னைகளின் பட்டியலில் பரவலாக இருப்பது முதுகுவலி. இளைஞர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படியே வீட்டில் இருப்பவர்களிடம் சொன்... மேலும் பார்க்க

1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா - மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo Album

ஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோட... மேலும் பார்க்க