செய்திகள் :

Trump: ட்ரம்ப்பால் சரிந்த Apple பங்குகள் - என்ன பின்னணி?

post image

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறது.

2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையில் 22 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 60 சதவிகிதம் அதிகம்.

அதோடு, இந்த உற்பத்தி சதவிகிதமானது உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்ட ஐபோன்களில் 15 சதவிகிதம்.

Apple - ஆப்பிள் நிறுவனம்
Apple - ஆப்பிள் நிறுவனம்

மேலும், சீனா தயாரிக்கப்படும் பொருள்களுக்கு ட்ரம்ப் அதிக வரி வைத்திருப்பதால், ஐபோன் உற்பத்தியை சீனாவில் குறைத்து, அதை இந்தியாவில் அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முயற்சிகள் எடுத்துவருகிறது.

ஆனால், இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்படுவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரும்பவில்லை.

இதனை, கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியைக் கட்டமைப்பதைத் தான் விரும்பலில்லை என்று ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

தற்போது, அந்த எச்சரிக்கையின் அடுத்தகட்டமாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், "அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும், இந்தியாவிலோ வேறு எங்கோ இருக்கக்கூடாது என்று முன்பே ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் தெரிவித்திருந்தேன்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

எனவே, அப்படியில்லையெனில் அமெரிக்காவுக்கு ஆப்பிள் நிறுவனம் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி" என இன்று (மே 23) பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 2 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ட்ரம்ப்பின் இத்தகைய அறிவிப்பு தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பிலிருந்து அறிவிப்பும் வெளியாகவில்லை.

4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திருக்கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமெனக் கருதியர்களில் ஒருவராகத் திகழும் பி.கே.சேகர்பாபுவை, அறநிலையத்துறை அமைச்சரா... மேலும் பார்க்க

Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என்ன?!

ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் 'ரஷ்யாவின் நிழற் கடற்படை' யைச் சுட்டிக்காட்டி தடைகளை விதித்துள்ளன. மேற்குலக நாடுகள், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்து... மேலும் பார்க்க

'அரக்கோணம் சம்பவம் ஒரு வெட்கக்கேடு; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!' - தவெக அறிக்கை!

'அரக்கோண சம்பவம் - தவெக கண்டனம்!'அரக்கோணத்தில் திமுக-வின் இளைஞரணியை சேர்ந்த தெய்வச்செயல் என்பவர் மீது பெண் ஒருவர் அளித்திருக்கும் பாலியர் புகார் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் அந்த சம்பவத்... மேலும் பார்க்க

`அபராதம் செலுத்தும் தவறுக்கு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதா?'- சவுக்கு சங்கர் காட்டம்... விவரம் என்ன?

'புகாரளித்த சவுக்கு சங்கர்!'சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை சார்புச் செயலாளரை சந்தித்து, தன்னுடைய ஊடக அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் சவ... மேலும் பார்க்க

சாகோஸ் தீவுகளை மீண்டும் பெற்ற மொரீஷியஸ்; பிரிட்டன் வைத்த 'ராணுவ நிபந்தனை' என்ன?

அறுபது ஆண்டுகள் கழித்து சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைத்துள்ளது இங்கிலாந்து அரசு. நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீண்ட நாள்கள் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய... மேலும் பார்க்க

'ED ரெய்டு வந்தா, ஓடிப்போய் மோடியை சந்திக்கிறீங்க..!' - சீமான் சாடல்

‘அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள்’ என முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியிருக்கிறார். இன்று (மே 23) நடைபெற்ற செய்தியாளர்... மேலும் பார்க்க