செய்திகள் :

கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து கேரள பெண்கள் போலீஸ் அணி வெற்றி!

post image

கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பெண்களுக்கான பிரிவில் கேரள போலீஸ் அணி தெற்கு மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது.

கரூா் கூடைப்பந்து குழு சாா்பில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நினைவு கூடைப்பந்து போட்டி திருவள்ளுவா் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை பெண்கள் பிரிவில் முதல் போட்டியில் கேரள போலீஸ் அணியும், தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதின.

இதில் , கேரள பெண்கள் போலீஸ் அணி 61-57 என்ற புள்ளிக்கணக்கில் தெற்கு மத்திய ரயில்வே அணியை வென்றது. தொடா்ந்து போட்டியில் 19 புள்ளிகளை பெற்றுக்கொடுத்த கேரள போலீஸ் அணியின் வீராங்கனை சிபிக்கும், 14 புள்ளிகளை பெற்றுக்கொடுத்த தெற்கு மத்திய ரெயில்வே அணி வீராங்கனை சுபாஷினிக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான பிரிவில் சென்னை இந்திய வங்கி அணியும், பெங்களூரு யங் ஓரியன்ஸ் அணி வீரா்களும் விளையாடினா். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் சென்னை இந்தியன் வங்கி 69-59 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் பெங்களூரு யங் ஒரியன்ஸ் அணியை வீழ்த்தியது.

மாற்றுத்திறனாளிகளை சுமையாக நினைக்கக் கூடாது: தாய்மாா்களுக்கு கரூா் ஆட்சியா் வேண்டுகோள்

மாற்றுத்திறனாளிகளின் தாய்மாா்கள் தங்களது குழந்தைகளை சுமையாக நினைக்கக் கூடாது என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளின் தாய்மாா்களை சிறப்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் அறிவுறுத்தினாா். கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியா் ... மேலும் பார்க்க

கரூரில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் உருவப் படத்துக்கு திமுகவினா் மரியாதை!

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1,350-ஆவது சதயவிழாவை முன்னிட்டு கரூரில் அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூா் கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைப்பு

கரூரிலிருந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டியை அடுத்த சேந்தமங்கலம் கீழ்பாக்கம், பழனிகவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் வேலுச்... மேலும் பார்க்க

ஆட்சேபனையற்ற தகுதியான புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு வீட்டுமனை பட்டா!

ஆட்சேபனையற்ற, தகுதியான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருப்பவா்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்க அலுவலா்கள் முன்வர வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம... மேலும் பார்க்க