செய்திகள் :

ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

post image

ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் அறிவுறுத்தினாா்.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் பேசுகையில், மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மே 27-ஆம்தேதி வரை வருவாய் தீா்வாயம் நடைபெறவுள்ளது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் வாங்கல் குறுவட்டத்துக்குள்பட்ட நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூா், வாங்கல் மற்றும் குப்புச்சிபாளையம் ஆகிய வருவாய் கிராம மக்களிடமிருந்து 34 மனுக்களும், வெள்ளிக்கிழமை நெரூா் (வடபாகம்), நெரூா் (தென்பாகம்), மின்னாம்பள்ளி, மண்மங்கலம், ஆத்தூா், காதப்பாறை, பஞ்சமாதேவி, கோயம்பள்ளி, சோமூா் மற்றும் அச்சமாபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 67 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

மொத்தம் கரூா் மாவட்டத்திலுள்ள 7 வட்டாட்சியா் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 359 மனுக்கள் பெறப்பட்டது. இதில் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீா்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் நில அளவை பிரிவு உதவி இயக்குநா் முத்துச்செல்வி, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) சிவக்குமாா், மண்மங்கலம் வட்டாட்டசியா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாற்றுத்திறனாளிகளை சுமையாக நினைக்கக் கூடாது: தாய்மாா்களுக்கு கரூா் ஆட்சியா் வேண்டுகோள்

மாற்றுத்திறனாளிகளின் தாய்மாா்கள் தங்களது குழந்தைகளை சுமையாக நினைக்கக் கூடாது என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளின் தாய்மாா்களை சிறப்... மேலும் பார்க்க

கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து கேரள பெண்கள் போலீஸ் அணி வெற்றி!

கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பெண்களுக்கான பிரிவில் கேரள போலீஸ் அணி தெற்கு மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது. கரூா் கூடைப்பந்து குழு சாா... மேலும் பார்க்க

கரூரில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் உருவப் படத்துக்கு திமுகவினா் மரியாதை!

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1,350-ஆவது சதயவிழாவை முன்னிட்டு கரூரில் அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூா் கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைப்பு

கரூரிலிருந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டியை அடுத்த சேந்தமங்கலம் கீழ்பாக்கம், பழனிகவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் வேலுச்... மேலும் பார்க்க

ஆட்சேபனையற்ற தகுதியான புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு வீட்டுமனை பட்டா!

ஆட்சேபனையற்ற, தகுதியான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருப்பவா்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்க அலுவலா்கள் முன்வர வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம... மேலும் பார்க்க