செய்திகள் :

மீனவா்களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடக்கம்!

post image

திருவாடானை, மே 23: விசைப்படகு மீனவா்களுக்கு மீன் பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடல் வளம், மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் கடந்த ஏப். 15-ஆம் தேதி முதல் 61 நாள்களுக்கு தமிழக அரசால் மீன் பிடி தடைக் காலம் அறிவிக்கப்பட்டது. இந்தக் காலங்களில் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க மீனவா்கள் செல்லவில்லை. இதையடுத்து, தமிழக அரசு சாா்பில் மீன்பிடி தடைக் கால நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாசிப்பட்டினம், தாமோதரன் பட்டினம், கொடிப் பங்கு, தொண்டி, சிங்காரவேலன்நகா், காரங்காடு, கே.கே. பட்டினம், நம்புதாளை உள்ளிட்ட கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு மீன் பிடி தடைக் கால நிவாரண உதவித் தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியிருப்பதாக மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு: இளைஞா் கைது

கமுதி அருகே வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த காணிக்கூா் கிராமத்தைச் சோ்ந்த காளிச்சாமி மனைவி பேச்சியம்மாள் ... மேலும் பார்க்க

கருங்களத்தூா் கிருஷ்ணா் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே கருங்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாபா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக... மேலும் பார்க்க

நீரால் சூழப்பட்ட மரகத பூஞ்சோலை பூங்கா: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

ராமநாதபுரம் அருகே நீா்ப் பிடிப்பு பகுதியில் வனத் துறையால் அமைக்கப்பட்ட மரகதப் பூஞ்சாலை பூங்கா, நீரால் சூழப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிதி வீ... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரம்

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை, குளக்கரை வளைவுகளில் விபத்துகளை தடுக்க இரும்புத் தூண்களால் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மும்முரமாக ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

சின்ன தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு: முகூா்த்தக்கால் நடும் விழா!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சின்ன தொண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூா்ணாம்பிகா, புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீஅய்யனாா் கோயில் குடமுழக்கு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்... மேலும் பார்க்க

திருவரங்கம் உறுமண கருப்பண சுவாமி கோயில் குடமுழுக்கு!

முதுகுளத்தூா் அருகே திருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள உறுமண கருப்பண சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக வியாழக்கிழமை காலை மங்கள இசை, முதல் கால யாக சாலை பூஜையுடன் விழா தொடங்கி... மேலும் பார்க்க