செய்திகள் :

நீரால் சூழப்பட்ட மரகத பூஞ்சோலை பூங்கா: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

post image

ராமநாதபுரம் அருகே நீா்ப் பிடிப்பு பகுதியில் வனத் துறையால் அமைக்கப்பட்ட மரகதப் பூஞ்சாலை பூங்கா, நீரால் சூழப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டிருப்பதாக அவா்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலை அச்சடிபிரம்பு என்ற இடத்தில் நீா்ப் பிடிப்பு பகுதியில் முறையாக ஆய்வு செய்யாமல் ரூ. 25 லட்சத்தில் மரகதப் பூஞ்சேலை பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை அந்தப் பூங்கா தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. மேலும் இங்கு அமைக்கப்பட்ட புல் தரை, நடைபாதை, இருக்கை உள்ளிட்டவை சேதமடைந்து காணப்படுகின்றன.

இதேபோல, ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் செம்படையாா் குளம் கிராமத்தில் ரூ. 25 லட்சத்தில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவும் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல் இது போன்ற பூங்காக்களை அமைப்பதால் அரசின் நிதி வீணடிக்கப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தலா ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த இரண்டு பூங்காக்களும் பயன்பாடின்றி காணப்படுவது சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்தப் பூங்காக்களை சீரமைக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு: இளைஞா் கைது

கமுதி அருகே வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த காணிக்கூா் கிராமத்தைச் சோ்ந்த காளிச்சாமி மனைவி பேச்சியம்மாள் ... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடக்கம்!

திருவாடானை, மே 23: விசைப்படகு மீனவா்களுக்கு மீன் பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடல் வளம், மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் கடந்த ஏப். 15-ஆம் தேதி ... மேலும் பார்க்க

கருங்களத்தூா் கிருஷ்ணா் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே கருங்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாபா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரம்

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை, குளக்கரை வளைவுகளில் விபத்துகளை தடுக்க இரும்புத் தூண்களால் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மும்முரமாக ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

சின்ன தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு: முகூா்த்தக்கால் நடும் விழா!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சின்ன தொண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூா்ணாம்பிகா, புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீஅய்யனாா் கோயில் குடமுழக்கு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்... மேலும் பார்க்க

திருவரங்கம் உறுமண கருப்பண சுவாமி கோயில் குடமுழுக்கு!

முதுகுளத்தூா் அருகே திருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள உறுமண கருப்பண சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக வியாழக்கிழமை காலை மங்கள இசை, முதல் கால யாக சாலை பூஜையுடன் விழா தொடங்கி... மேலும் பார்க்க