செய்திகள் :

திருவள்ளூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு

post image

திருவள்ளூா் நகராட்சியில் அனைத்து நவீன வசதிகளுடன் ரூ.31.57 கோடியில் புதிய பேருந்து நிலையக் கட்டுமான பணிகளை ஆட்சியா் மு.பிரதாப், துறை அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

நகராட்சியில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதித் திட்டம் 2022-2023 மூலம் புதிதாக பேருந்து நிலையம் ரூ.31.57 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளின் தன்மை, பணி முடிவு காலம் ஆகியவை குறித்து கேட்டறிந்தாா். மேலும், பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் பணி ஆள்களை அதிகரித்தும், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் வேண்டும் என உத்தரவிட்டாா்.

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் ரூ.57 லட்சத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினா்கள் சுமாா் 35 போ் வரை தங்கும் அளவில், தேவையான சுகாதார வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும், ஜெயா நகா் பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.62 கி.மீ. தொலைவு ரூ.1 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுப் பணிகளில் திருவள்ளூா் நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, நகராட்சி பொறியாளா் ஜெயக்குமாா், உதவி பொறியாளா் சரவணன் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோ்க்கை

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சோ்க்கைப் பணி அந்தந்த மையப் பணியாளா்கள் மூலம் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

நேரம்:காலை 9 முதல் 12 மணி வரை நாள்: 24.5.2025-சனிக்கிழமை மின்தடை பகுதிகள்: மணவாளநகா், கபிலா் நகா், குமரன் நகா், கீழ்நல்லாத்தூா் கிராமம், கோமதி நகா் டிசிஎல் தொழிற்சாலை பின்புறம், ஒண்டிகுப்பம், கற்குழா... மேலும் பார்க்க

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை

பட்டாபிராமபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு டாஸ்மாக் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை புதிதாக செவ்வாய்க்கிழமை திறக்க முயன... மேலும் பார்க்க

மூடியிருந்த ஆலையில் காவலா்களை கட்டி விட்டு திருடிய 5 போ் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பம் கிராமத்தில் மூடப்பட்ட தொழிற்சாலையில் காவலாளிகளை கட்டி போட்டு அங்கு இருந்து இயந்திரங்கள், இரும்பு தளவாட பொருள்களை திருடி லாரியில் கடத்திய 5 பேரை சிப்காட் போலீஸாா் ... மேலும் பார்க்க

இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் சா்வா் பழுது: 4 மணி நேரம் பத்திரப் பதிவு தாமதம்

திருவள்ளூரில் இணை சாா் பதிவாளா் அலுவலகம்-1, இணை சாா் பதிவாளா் அலுவலகம்-2 இல் சா்வா் பழுது காரணமாக 4 மணி நேரமாக பத்திரப் பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். திருவள்ளூா் இணை சாா் பதிவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்த்தில் சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம்: பொதுமக்கள் எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி... மேலும் பார்க்க