செய்திகள் :

அடிமைக் கட்சியல்ல திமுக; யாருக்கும் அடிபணிய மாட்டோம்! - உதயநிதி ஸ்டாலின்

post image

ஈ.டி.(அமலாக்கத்துறை)க்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்படமாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ. 1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை, டாஸ்மாக் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, டாஸ்மாக் புகாரில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்துதான் முதல்வர் தில்லி சென்று பிரதமரைச் சந்திக்கிறார் என்று பேசப்பட்ட நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி,

"முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் நிதி உரிமையைக் கேட்பதற்காக தில்லிக்கு சென்றுள்ளார். ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். ED (அமலாக்கத்துறை)க்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்போம். மிரட்ட முயற்சித்தார்கள். மிரட்டி அடிபணிய வைப்பதற்கு அடிமை கட்சியல்ல திமுக. முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய கட்சி. சுயமரியாதை கட்சி. பெரியார் கொள்கைகள் கொண்ட கட்சி. தப்பு செய்கிறவர்கள்தான் பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. யாருக்கும் அடிபணியத் தேவையில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | கோட்டா மாணவர்கள் தற்கொலை விவகாரம்: ராஜஸ்தான் துணை முதல்வர் என்ன சொல்கிறார்?

நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: விஜய்

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக வி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றது. இதில் முதல்வர... மேலும் பார்க்க

மன உளைச்சலில் அன்புமணி! 2026 தேர்தல் வெற்றியில் பாமக?

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கும், அக்கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் அண்மையில் கர... மேலும் பார்க்க

சொத்துவரி விவகாரம்: இபிஎஸ்-க்கு அமைச்சர் கே.என் நேரு பதில்

சொத்துவரி உயர்வு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு ... மேலும் பார்க்க

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு: இபிஎஸ் கண்டனம்

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த 48 மாதங்கள... மேலும் பார்க்க

கனமழை: நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான ச... மேலும் பார்க்க