செய்திகள் :

கோவை ரெட் அலர்ட் அப்டேட் - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

post image

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் சார்பில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கோவை மழை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கோவை மாவட்டத்துக்கு தேசிய மீட்புப் படை மற்றும் மாநில மீட்புப் படை குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.

இதையடுத்து மழை கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மழை கண்காணிப்பு அலுவலர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர்,

அதிகாரிகள் ஆலோசனை

மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு பணிகளும் நடைபெற்றது.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோவை ஆட்சியர் பவன்குமார், “கோவை மாவட்டத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடர் மீட்புப் படை

மழையால் விழும் மரங்களை அகற்ற இயந்திரங்கள், ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் தேங்கியுள்ள நீரை அகற்றுவதற்கான மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். அங்கு அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் 80 பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ளனர்.

பேரிடர் மீட்புப் படை

மேலும், மழை குறித்த பாதிப்புகளை பொதுமக்கள் 1077 என்கிற அவசர கால உதவி எண்ணுக்கும், மாவட்ட நிர்வாகத்தையும் (0422 2301114), கோவை மாநகராட்சி (0422 2302323, வாட்ஸஅப் 8190000200) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

மாநகர் பகுதிகளில் உள்ள 6 மேம்பாலங்களில் தேங்கும் தண்ணீரை அகற்ற மோட்டார் பாம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிவாரண முகாம் அமைக்க உள்ளோம். மாவட்டம் முழுவதும் 40 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. வால்பாறை நிலச்சரிவு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 3 குழுக்குள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

Niti Aayog: "இது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது!" - நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் உரை!

நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. பல மாநில முதலமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, புதுச்சேரி ... மேலும் பார்க்க

விழுப்புரம்: குப்பைக்கிடங்காய் மாறிவரும் மைதானம்.. மாறி மாறி கைகாட்டும் நிர்வாகங்கள்! - தீர்வு என்ன?

விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு அருகே மிகப்பெரிய அளவிலான நகராட்சி மைதானம் அமைந்துள்ளது. சுமார் 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த மைதானத்தில்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விடுமுறை நாள்களிலும் ஓய... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரயில் நிலையத்தின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்- சுத்தம் செய்த ரயில்வே அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அருகிலுள்ள ஏலகிரி ஏரியில் மாசுபாடு ஏற்படுவதாக பொதுமக... மேலும் பார்க்க

"Tasmac நிறுவனத்தை முடக்க முயற்சி" - அமலாக்கத்துறை மீது அமைச்சர் முத்துசாமி குற்றச்சாட்டு

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காலிங்கராயன் கால்வாய் பகுதியில் பேபி கால்வாய் உள்ளது.அக்கால்வாயை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ரூ.28 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை தமிழக வ... மேலும் பார்க்க

வேலூர்: ஆபத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்... மின் கம்பத்தை விரைந்து சீரமைத்த அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்துள்ளது, மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே 20 ஆம் தேதி இரவு பெய்த கனமழ... மேலும் பார்க்க

முழங்கிய 30 குண்டுகள், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அணுசக்தி விஞ்ஞானியின் உடல்!

இந்திய அணுசக்தி துறையின் மிக மூத்த அறிவியலாளரான எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20 - ம் தேதி விடியற்காலை ஊட்டியில் உயிரிழந்தார். 95 வயதில் காலமான எம்.ஆர். ஸ்ரீனிவ... மேலும் பார்க்க