செய்திகள் :

முழங்கிய 30 குண்டுகள், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அணுசக்தி விஞ்ஞானியின் உடல்!

post image

இந்திய அணுசக்தி துறையின் மிக மூத்த அறிவியலாளரான எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20 - ம் தேதி விடியற்காலை ஊட்டியில் உயிரிழந்தார். 95 வயதில் காலமான எம்.ஆர். ஸ்ரீனிவாசன் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றவர். இந்திய அணுசக்தி துறையில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் விளங்கியவர்.

குடியரசு தலைவருடன் எம் ஆர் ஸ்ரீனிவாசன்.

1955 -ம் ஆண்டு அணுசக்தித் துறையில் இணைந்த இவர், இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையான அப்சரா கட்டுமானத்தில் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து பணியாற்றியவர். ஆகஸ்ட் 1959 -ல் இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்திற்கான முதன்மை திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டவர். 1967- ல்‌ மெட்ராஸ் அணு மின் நிலையத்தின் தலைமை திட்டப் பொறியாளராகப் பொறுப்பேற்றவர்.

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல பதவிகளை வகித்து வந்த இவர், 1974 - ம் ஆண்டு அணுசக்தி திட்ட பொறியியல் பிரிவின் இயக்குநராகவும், 1984- ல் அணுசக்தி வாரியத்தின் தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.

1987 - ம் ஆண்டில் அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில், அவர் இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) நிறுவனர்- தலைவராகவும் ஆனார்.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

அவரது தலைமையின் கீழ் அப்போது 18 அணுசக்தி அலகுகள் உருவாக்கப்பட்டன. எம்.ஆர். ஸ்ரீனிவாசனின் அறிவியல் அர்ப்பணிப்பை போற்றும் விதமாக முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டனில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றிருந்த நிலையில் நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார். 30 குண்டுகள் முழங்க காவல்துறையினர் வீர வணக்கம் செலுத்தி விடை கொடுத்தனர்.

வேலூர்: ஆபத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்... மின் கம்பத்தை விரைந்து சீரமைத்த அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்துள்ளது, மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே 20 ஆம் தேதி இரவு பெய்த கனமழ... மேலும் பார்க்க

``தவெக-வின் வேகம் பத்தாது... திமுக மீதான விமர்சனங்களில் நான் பின்வாங்கவில்லை” - காளியம்மாள் பேட்டி

நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் விலகிய காளியம்மாள், 'தி.மு.க பக்கம் செல்லப்போகிறார். இல்லை, இல்லை... தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார்' என பல செய்திகள் றெக்கைக் கட்டின. நாகப்பட... மேலும் பார்க்க

வேலூர்: கனமழையில் சேதமடைந்து சாய்ந்த மின் கம்பம்; அச்சப்படும் பொதுமக்கள்.. கவனிப்பார்களா அதிகாரிகள்?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்திருக்கிறது மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருக்கும் மின்கம்... மேலும் பார்க்க

ஆத்தூர்: பராமரிப்பின்றி பாழாகும் சிறுவர் பூங்கா... அச்சப்படும் மக்கள்! - கவனிப்பார்களா அதிகாரிகள்?

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், காந்தி நகர் பகுதியில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இங்கு நேரத்தை செலவிடு... மேலும் பார்க்க

நிதி ஆயோக்: "வீராவேசமாக பேசியவர் டெல்லிக்கு பறக்கிறாராம்..."- ஸ்டாலினைச் சாடும் எடப்பாடி பழனிசாமி

நிதி ஆயோக் கூட்டம் 2015-ம் ஆண்டு முதல் பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்... மேலும் பார்க்க

துபாயிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு - ஏன் தெரியுமா?

துபாயில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வது சம்பந்தமாக புதிய விதிகளை விதித்துள்ளது மத்திய அரசு. அதன் படி, இந்தியா - ஐக்கிய அரபு அமீரக விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ், முகவர் நிறுவனங... மேலும் பார்க்க