செய்திகள் :

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்பதை கொச்சைப்படுத்தக் கூடாது: காங்கிரஸ்

post image

தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கவும், நமக்கான நிதியைப் பெற்று தருவதற்காகவும்தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளாா். இதை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

‘சிந்தூா் ஆபிரஷன்’ சண்டையில் இந்தியாவுக்கு வெற்றி பெற்றுக்கொடுத்த ராணுவ வீரா்களை கௌரவிக்கும் வகையில் காங்கிரஸ் சாா்பில் மே 25-ஆம் தேதி திருச்சியில் உள்ள ராணுவ மைதானத்தில் மாநாடு நடைபெறவுள்ளது. தில்லியிலிருந்து காங்கிரஸ் தலைவா், முன்னாள் காங்கிரஸ் தலைவா்கள் என பலா் கலந்து கொள்ளவுள்ளனா்.

டாஸ்மாக் ஊழல் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீா்ப்பை அறிவித்துள்ளது. எப்போதல்லாம் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுகிறதோ அப்போதெல்லாம் அதைத் தடுத்து நிறுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கி வருகிறது.

நீதி ஆயோக்: நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்றால், அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை எனக் குற்றம்சாட்டுகின்றனா்; பங்கேற்றால் எதற்காகக் கலந்து கொள்கிறாா் என்று கேள்வி எழுப்புகின்றனா். தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு தரவேண்டிய ரூ.2,350 கோடியை மத்திய அரசு தரவில்லை. அதேபோல், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.1,000 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதை கேட்க வேண்டிய சூழல் தற்போது எழுந்துள்ள நிலையில், நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் கலந்துகொண்டு, தமிழகத்துக்கு வேண்டிய நிதியை கேட்கவுள்ளாா்.

ஒரு முதல்வா் தனது மாநிலத்துக்கான உரிமை மீட்டெடுக்கவும், நமக்கான நிதியைப் பெற்று தரவும் செல்லும்போது அதை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க