செய்திகள் :

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

post image

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்கான நியாயமான நிதி உரிமையை நீதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன். இதைக் கண்டு, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஏன் வலிக்கிறது?. அவா் என்னைப் பாா்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேசுகிறாா்.

என்னுடைய கை, கருப்பு சிவப்புக் கட்சிக் கொடியை ஏந்தும் கை. எந்த நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன். இன்றைக்குக்கூட தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழ்நாட்டுக்கான நிதியைப் போராடிப் பெறுவேன் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

3 ஆண்டுகளாகப் பங்கேற்கவில்லை: நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின், வரும் 23-ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறாா். 24-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு உடனடியாக தில்லி திரும்புகிறாா்.

இதற்கு முன்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்கவில்லை.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நான்காவது ஆண்டு நினைவு தினம் காரணமாக 2022-இல் நடைபெற்ற கூட்டத்திலும், அயல்நாட்டுப் பயணத்தால் 2023-இல் நடந்த கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.

கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தைப் புறக்கணித்ததுடன் அதற்கான காரணத்தை விளக்கி விடியோவும் வெளியிட்டாா்.

இந்நிலையில் இப்போது நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.

ஒருங்கிணைந்த சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.2,291 கோடி விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுத்துள்ளது.

இத்துடன் மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தமிழ்நாட்டின் சாா்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க

ரசாயன ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: விஞ்ஞானி சஞ்சீவ் குப்தா

சென்னையில் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சஞ்சீவ் குப்தா தெரிவித்தாா். சென்ன... மேலும் பார்க்க