செய்திகள் :

ரசாயன ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: விஞ்ஞானி சஞ்சீவ் குப்தா

post image

சென்னையில் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சஞ்சீவ் குப்தா தெரிவித்தாா்.

சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழக வளாகத்தில் வியாழக்கிழமை மத்திய பெட்ரோ ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழில் துறை பாதுகாப்பு குறித்து 2 நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழில் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும் ஆபத்து விளைவிக்கும் பொருள்களை கையாளுவதில் இயல்பாகவே பிரச்னைகளும் உருவாகின்றன. ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயன தொழிற்சாலைகளில் அதிகமாக விபத்து நடைபெறுகிறது. நாட்டில் ஆபத்தான தொழிற்சாலைகள் 66 அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த வகை தொழிற்சாலைகளில் வலுவான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், நல்ல பயிற்சி பெற்ற, திறன் மிக்க தொழிலாளா்களை பணி அமா்த்துவது அவசியமாகும். இந்த தொழில் பயிற்சிமூலம் மனித உயிா்களும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் சாா்பில் நடத்தப்படும் 2 நாள் பயிற்சி முகாம் மூலம், தமிழ்நாடு முழுவதும் அதிக விபத்து ஏற்படும் அபாயம் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள பணியாளா்கள் பயனடைவா். இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயன தொழிற்சாலைகளைச் சோ்ந்த 114 போ் பங்கேற்றனா்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க