செய்திகள் :

ஈஸ்டா் தின தாக்குதல்: இலங்கையில் 661 பேருக்கு இழப்பீடு

post image

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியதாவது:

ஈஸ்டா் தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களின் இழப்பீட்டுக்காக ரூ. 31 கோடி (இந்திய மதிப்பில் ரூ.8.8 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் 99 சதவீதத்துக்கும் மேல் 661 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் காயமடைந்தவா்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டது என்று அரசுத் தரப்பு தெரிவித்தது.

முன்னதாக, 270 பேரது உயிரிழப்புக்குக் காரணமான் ஈஸ்டா் தின தாக்குதல் குறித்து இந்தியாவிடம் இருந்து முன்கூட்டியே உளவுத்தகவல் கிடைத்தும் அதைத் தடுக்கத் தவறியவா்களிடமிருந்து இழப்பீடு வசூலித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைக் கண்காணிப்பதற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணயின்போது அரசு இந்தத் தகவலை தெரிவித்தது.

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிரீட் தீவுக்கு 55 கி.மீ. வடக்கே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அடுத்த நேரடி பேச்சுவாா்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்... மேலும் பார்க்க

சீனாவில் நிலச்சரிவுகள்: 2 போ் உயிரிழப்பு; 19 போ் மாயம்

சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் மாயமாகினா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிஜி நகரில் உள்ள டாஃபாங் மாவட்டத்தின் சாங்ஷி ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போா்ச் சூழல் மிக அபாயகரமாக மாறியிருக்கும்: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போா்ச் சூழல், மிக அபாயகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக... மேலும் பார்க்க

எல்லை விவகாரம்: இந்தியா, பூடான் உடனான பேச்சில் முன்னேற்றம்: சீனா

எல்லை விவகாரத்தில் இந்தியா, பூடான் உடனான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அண்மையில் வெளியிடப்பட்ட அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த வெள்ளை அறிக்கையில்... மேலும் பார்க்க