செய்திகள் :

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் பலி - ஊட்டி மலைப்பாதையில் கோரம்

post image

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்ய பிரியா (29). இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின், மகள் வழி பேத்தி ஆவார். திவ்யாவுக்கு திருமணமாகி கார்த்திக் (வயது 30) என்கிற கணவர் உள்ளார். திவ்ய பிரியா தன் கணவர் மற்றும் உறவினர்களுடன், கடந்த மே 20-ம் தேதி சுற்றுலாவுக்காக நீலகிரி மாவட்டம், ஊட்டி சென்றனர். அங்கு 2 நாள்கள் இருந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை திவ்ய பிரியா குடும்பத்தினர் மதுரைக்கு புறப்பட்டனர்.

ஊட்டி
ஊட்டி
காரை கார்த்திக்கின் இளைய சகோதரர் பார்த்திபன் இயக்கியுள்ளார். அவர்கள் பயணித்த கார், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை, கல்லாறு அருகே முதல் கொண்டை ஊசி வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரை முட்டி கார் கவிழ்ந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த திவ்ய பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் திவ்ய பிரியாவின் கணவர் கார்த்திக் மற்றும் அவர்களின் உறவினர்கள் பரமேஷ்வரி, வளர்மதி ஆகியோரும் காயமடைந்தனர்.
திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி திவ்ய பிரியா
திண்டுக்கல் சீனிவாசன்

தகவலறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். திவ்ய பிரியாவின் உடல் மீட்கப்பட்டு, பிரதே பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து சம்பவம் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா: பிறந்த குழந்தை மீது போதையில் படுத்த தந்தை; பதறிப்போன தாய்; குழந்தைக்கு நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கானாபூர் அருகில் உள்ள சீமல்பல்லி என்ற இடத்தில் வசிப்பவர் சேகர்(22). கூலித்தொழிலாளியான சேகர் மனைவி சுஜாதாவிற்குக் கடந்த 28 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தி... மேலும் பார்க்க

`சாலையில் 20 அடி குழி; விழுந்து தம்பதி உயிரிழப்பு' - ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள சேர்வைக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நாகராஜ் மனைவி ஆன... மேலும் பார்க்க

ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்; பயணிகள் அலறல்.. பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி

டெல்லியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று ஸ்ரீநகருக்கு புறப்பட்டது 6E2142 என்ற இண்டிகோ விமானம். அந்த விமானத்திலிருந்து பயணிகளில் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. அந்த வீ... மேலும் பார்க்க

சிவகங்கை பயங்கரம் : கல் குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு; சோகத்தில் மக்கள்

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் மேகா புளு மெட்டல் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமீறல்கள் நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வந்துள்ளத... மேலும் பார்க்க

Sunset: சூரியன் மறைவதை போட்டோ எடுக்க முயன்ற மாணவி; 7-வது மாடியில் தவறி கீழே விழுந்து மரணம்

மும்பை தகிசர் கிழக்கு பகுதியில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் வசித்தவர் மாணவி ஜான்வி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10-வது வகுப்பு படித்து வந்தார். ஜான்வி மாலை நேரத்தில் தனது தந்தையுடன் நடைபயிற்சி சென்றபோ... மேலும் பார்க்க

திருப்பூர்: சாயக்கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது தாக்கிய விஷவாயு; இருவர் பலி... மூவர் கவலைக்கிடம்!

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள சாயக்கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை மாலை ஐந்து பேர்... மேலும் பார்க்க