செய்திகள் :

தென் ஆப்பிரிக்கா அதிபரிடம் போலியான இனப்படுகொலை வீடியோவை காட்டினாரா ட்ரம்ப்? - வெடிக்கும் சர்ச்சை

post image

'விளக்குகளை அணையுங்கள்' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற, வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகத்தின் விளக்குகள் அணைகிறது.

அங்கே, கிட்டத்தட்ட நான்கு நிமிட வீடியோ ஓடுகிறது.

அதில் 'எங்களுக்கு யார் அனுமதியும் தேவையில்லை. நீங்கள் யார் எங்களை அனுமதிக்க... நாங்கள் எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்கிறோம்' என்று ஒரு நாட்டின் நாடாளுமன்றக் காட்சி விரிகிறது. பின்னர், வரிசையாக வெள்ளை சிலுவைகள் கொண்ட சமாதியின் வீடியோ என அடுத்தடுத்த காட்சிகள் ஓடி முடிகிறது, அந்த வீடியோ.

'உங்கள் நாட்டில் வெள்ளை விவசாயிகள் மற்றும் வெள்ளையர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடக்கிறது' என்று ட்ரம்ப் படபடக்கிறார்.

அத்தனையையும் மெல்லிய முறுவலோடு எதிர்கொள்கிறார் அந்த மனிதர்.

தென் ஆப்பிரிக்க அதிபர் ரமபோசா
தென் ஆப்பிரிக்க அதிபர் ரமபோசா

அவர் தான் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசா. அந்த நாடாளுமன்றக் காட்சியும், அந்த சமாதி காட்சியும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை.

நடந்தது என்ன?

நேற்று முன்தினம் (மே 21) அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசோ இடையே நடந்த சந்திப்பு சுமூகமாகவே தொடங்கியது.

அப்போது ஒரு நிருபர், 'தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை விவசாயிகள் இனப்படுகொலை' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ரமபோசா, "தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இன படுகொலை நடந்தால், இந்த மூன்று ஜென்டில் மேன்களும் (தென் ஆப்பிரிக்க வெள்ளை அதிகாரிகள்) என்னுடன் வந்திருக்கமாட்டார்கள். என்னுடைய விவசாயத் துறை அமைச்சரும் (இவரும் வெள்ளையர் தான்) வந்திருக்கமாட்டார். அதிபர் ட்ரம்ப் அவர்களிடம் கேட்கட்டும்" என்று பதில் அளிக்கிறார்.

அப்போது ட்ரம்ப், 'தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் இனப்படுகொலை குறித்து ஆயிரமாயிரம் கதைகளை கேட்கிறோம். செய்திகளைப் படிக்கிறோம். ஆவணப் படங்களை பார்க்கிறோம்" என்று கூறியப் பின் தான், மேலே சொன்ன சம்பவம் நடந்தது.

அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரமபோசா, 'நான் இப்படி எதையும் பார்த்ததில்லை. இது எங்கே நடக்கிறது?' என்று கேட்க, ட்ரம்பின் பதில், 'தென் ஆப்பிரிக்காவில் தான்'.

அதற்கு பதிலளித்த ரமபோசா, 'எங்கள் நாட்டில் கொலைகள் நடக்கிறது தான். ஆனால், அதில் வெள்ளையர்கள் மட்டும் இறப்பதில்லை' என்று எடுத்துரைக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பணக்காரரான ஜோஹன் ரூபர்ட்டும் கலந்துகொண்டிருந்தார்.

பின்னர், ட்ரம்பிடம் பேசும்போது ரூபர்ட், "நீங்களும், நானும் 1980-களில் நியூயார்க்கில் வாழ்ந்து இருக்கிறோம். அப்போது இருந்த நிலைமை இப்போது இல்லை. அதுமாதிரி எங்கள் நாட்டிலும் எதிர்காலத்தில் மாறும்" என்று நம்பிக்கையாக நாட்டை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார்.

ஒருவழியாக, அந்த சந்திப்பு ஓரளவு சமூகமாகவே நடந்து முடிந்தது.

ஆனால், ட்ரம்பின் இந்த செய்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

தன்னை சந்திக்க வந்த ஒரு நாட்டின் அதிபரை ட்ரம்ப் இப்படி கையாண்டது தவறு என்று காரணம் கூறப்படுகிறது. இது முதல் தடவை அல்ல. கடந்த பிப்ரவரி மாதம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இது தான் நடந்தது.

அதுவும், 'ட்ரம்ப் காட்டிய வீடியோ, பேசியவை உண்மையானதா?' என்று பார்த்தால், 'இல்லவே இல்லை' என்கிறார்கள்.

ட்ரம்பின் வீடியோ காட்சியில் வந்த சமாதி காட்சி, சமாதியே அல்ல. அது 2020-ம் ஆண்டு விவசாயி தம்பதிகள் கொலை நடந்தப்போது, அவர்களின் இறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டம் அது.

மேலும், ட்ரம்ப் பேசிய வெள்ளை இன படுகொலை, 1,000 வெள்ளை விவசாயிகள் கொலை போன்ற அனைத்து தகவல்கள் உண்மைக்கு புறம்பானதாகவே இருந்திருக்கிறது. இதை CNN செய்தி நிறுவனத்தின் தென் ஆப்பிரிக்கா பத்திரிகையாளர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், பேராசியர்கள் என பலர் உறுதி செய்கிறார்.

ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் 1,000 விவசாயிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால், அது நிச்சயம் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போகாது. தென் ஆப்பிரிக்காவில் கொலைகள் நடக்கிறது. ஆனால், அதில் ஆப்பிரிக்கர்கள் விதிவிலக்கு அல்ல என்று ஆதாரத்துடன் பேசுகின்றனர்.

ஆக, ட்ரம்ப் கூறிய தகவல்கள் பொய்யானவை என்று தற்போது சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

Trump: ட்ரம்ப்பால் சரிந்த Apple பங்குகள் - என்ன பின்னணி?

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறது.2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையில் 22 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரி... மேலும் பார்க்க

சாகோஸ் தீவுகளை மீண்டும் பெற்ற மொரீஷியஸ்; பிரிட்டன் வைத்த 'ராணுவ நிபந்தனை' என்ன?

அறுபது ஆண்டுகள் கழித்து சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைத்துள்ளது இங்கிலாந்து அரசு. நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீண்ட நாள்கள் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய... மேலும் பார்க்க

'ED ரெய்டு வந்தா, ஓடிப்போய் மோடியை சந்திக்கிறீங்க..!' - சீமான் சாடல்

‘அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள்’ என முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியிருக்கிறார். இன்று (மே 23) நடைபெற்ற செய்தியாளர்... மேலும் பார்க்க

சிவகங்கை: கிளம்பிய எதிர்ப்பு; நூல் வெளியீட்டு விழா ரத்து; திரும்பிச்சென்ற ஆளுநர் - நடந்தது என்ன?

நாட்டார்களின் எதிர்ப்பால் நூல் வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பிச் சென்ற சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிவ... மேலும் பார்க்க

'கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கெடுபிடி; கொள்கை மாற்றத்தில் அரசாங்கம்!' - காரணம் என்ன?

வெளிநாட்டில் படிக்க ஆசைப்படும் இந்திய மாணவர்களின் சாய்ஸ்களில் ஒன்று, 'கனடா'. ஆனால், கனடாவில் எடுக்கப்படும் கொள்கை மாற்றங்களால், 'இது இனி தொடருமா?' என்கிற சந்தேகம் எழுகிறது. ஏன்... என்ன ஆனது? மேலே கூறி... மேலும் பார்க்க

Sindoor: "கேமராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன்?" - மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

ராஜஸ்தான் மாநிலத்தில் முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று (மே 22) பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ``இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஏற்பாடு செ... மேலும் பார்க்க