செய்திகள் :

Sindoor: "கேமராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன்?" - மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று (மே 22) பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ``இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஏற்பாடு செய்து ஆதரித்த பாகிஸ்தான், அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியிருக்கிறது.

என் நரம்புகளில் இரத்தம் ஓடவில்லை... சூடான சிந்தூர் (குங்குமம்) ஓடுகிறது" என உரையாற்றினார்.

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

இதை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, `"வெறுமனே பேசிக்கொண்டே இருப்பதை நிறுத்துங்கள். பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் ஏன் நம்பினீர்கள் என்று சொல்லுங்கள்?

ட்ரம்ப் இட்ட கட்டளைக்குத் தலைவணங்கி இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்? கேமராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன்?

இந்தியாவின் கண்ணியத்தைக் காப்பதில் நீங்கள் சமரசம் செய்துவிட்டீர்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.

இதற்குப் பதிலளித்திருக்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ``பிரதமர் மோடியின் உரையை நீங்கள் தாமதமாகப் பார்த்ததாகத் தெரிகிறது. அந்த உரையைக் கேட்க இன்னும் 10 நாள் கூட தள்ளிப்போயிருக்கலாம்.

அதுவும் நல்லதுதான். காங்கிரஸ் பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்குக் காதல் கடிதம் அனுப்பியது போல மோடி அரசு செயல்படாது.

நாங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான பதிலடியை அளித்துள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சாகோஸ் தீவுகளை மீண்டும் பெற்ற மொரீஷியஸ்; பிரிட்டன் வைத்த 'ராணுவ நிபந்தனை' என்ன?

அறுபது ஆண்டுகள் கழித்து சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைத்துள்ளது இங்கிலாந்து அரசு. நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீண்ட நாள்கள் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய... மேலும் பார்க்க

'ED ரெய்டு வந்தா, ஓடிப்போய் மோடியை சந்திக்கிறீங்க..!' - சீமான் சாடல்

‘அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள்’ என முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியிருக்கிறார். இன்று (மே 23) நடைபெற்ற செய்தியாளர்... மேலும் பார்க்க

சிவகங்கை: கிளம்பிய எதிர்ப்பு; நூல் வெளியீட்டு விழா ரத்து; திரும்பிச்சென்ற ஆளுநர் - நடந்தது என்ன?

நாட்டார்களின் எதிர்ப்பால் நூல் வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பிச் சென்ற சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிவ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா அதிபரிடம் போலியான இனப்படுகொலை வீடியோவை காட்டினாரா ட்ரம்ப்? - வெடிக்கும் சர்ச்சை

'விளக்குகளை அணையுங்கள்' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற, வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகத்தின் விளக்குகள் அணைகிறது. அங்கே, கிட்டத்தட்ட நான்கு நிமிட வீடியோ ஓடுகிறது. அதில் 'எங்களுக்கு யார் அனுமதியும் தேவையில்... மேலும் பார்க்க

'கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கெடுபிடி; கொள்கை மாற்றத்தில் அரசாங்கம்!' - காரணம் என்ன?

வெளிநாட்டில் படிக்க ஆசைப்படும் இந்திய மாணவர்களின் சாய்ஸ்களில் ஒன்று, 'கனடா'. ஆனால், கனடாவில் எடுக்கப்படும் கொள்கை மாற்றங்களால், 'இது இனி தொடருமா?' என்கிற சந்தேகம் எழுகிறது. ஏன்... என்ன ஆனது? மேலே கூறி... மேலும் பார்க்க

'புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்'- எடப்பாடி வலியுறுத்தல்

வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டி... மேலும் பார்க்க