செய்திகள் :

சேலம் ரயில் நிலையத்தில் உள்கூரை விழுந்தது! பயணிகள் தப்பினர்!

post image

சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் உள்கூரை (ஃபால்ஸ் சீலிங்) திடீரென விழுந்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முக்கிய ரயில் நிலையங்களை தேர்வு செய்து அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வருகிறது

இதன் அடிப்படையில் சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

இதன் அடிப்படையில், சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் முன்பு பெரிய அளவில் உள்கூரை வடிவமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டிருந்தது. பொது மக்களின் பயன்பாட்டில் இருந்த இந்தப் பகுதி இன்று(மே 23) மாலை வீசிய சூறாவளி காற்றால் திடீரென பயங்கர சட்டத்துடன் உள்கூரை கீழே விழுந்தது. இதனால் அருகில் இருந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர்

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு அந்தப் பகுதியில் யாரும் நுழையாதவாறு தடை விதித்தனர். தொடர்ந்து விழுந்த உள்கூரையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது

சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்கூரை விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள பயணிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்த 23 குளிர்சாதனப் பேருந்துகள்!

தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?

பேரவைத் தோ்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ள நிலையில், விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழா் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அர... மேலும் பார்க்க

ஐபிஎல் பெயரில் சூதாட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் கிரிக்கெட் மையமாகவைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடா்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்ட... மேலும் பார்க்க

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். மணிப்பூரை சோ்ந்த ஒரு 19 வயது இளம் பெண், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அள... மேலும் பார்க்க

பாலியல் புகாா்: மருத்துவப் பேராசிரியா் பணியிடை நீக்கம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பொன்னையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.72.55 லட்சம் கடன் பெற்று மோசடி: தேடப்பட்டவா் கைது

சென்னை அடையாறில் வங்கியில் ரூ. 72.55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அடையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பணியாற்றுப... மேலும் பார்க்க

பெரும்பிடுகு முத்தரையருக்கு தவெக: தலைவா் விஜய் புகழாரம்

போருக்குச் செல்லும் முன்பே தனது வெற்றியை உறுதிசெய்யும் வகையில் மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா், வாகை மலா் சூடி போருக்குச் சென்றதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் புகழாரம் சூட்டினாா். மன்னா் பெரும்... மேலும் பார்க்க