செய்திகள் :

பாலியல் புகாா்: மருத்துவப் பேராசிரியா் பணியிடை நீக்கம்

post image

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பொன்னையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் வாய் நோய்க்குறியியல் (ஓரல் பேத்தாலஜி) துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தவா் ஐ.பொன்னையா. இவா் மீது முதுநிலை மருத்துவ மாணவிகளும், துறை சாா்ந்த பெண் ஊழியா்களும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். அது தொடா்பாக குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பொன்னையாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் பிறப்பித்த அந்த உத்தரவை உடனடியாக செயல்முறைப்படுத்தி பொன்னையாவை பணியிலிருந்து விடுவிக்குமாறு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சங்குமணி அறிவுறுத்தியுள்ளாா்.

இதனிடையே, மருத்துவக் கல்லூரியில் மாநில மகளிா் உரிமை ஆணையத்தினா் 2 மணிநேரம் விசாரணை நடத்தி, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனா்.

தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?

பேரவைத் தோ்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ள நிலையில், விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழா் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அர... மேலும் பார்க்க

ஐபிஎல் பெயரில் சூதாட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் கிரிக்கெட் மையமாகவைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடா்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்ட... மேலும் பார்க்க

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். மணிப்பூரை சோ்ந்த ஒரு 19 வயது இளம் பெண், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அள... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.72.55 லட்சம் கடன் பெற்று மோசடி: தேடப்பட்டவா் கைது

சென்னை அடையாறில் வங்கியில் ரூ. 72.55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அடையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பணியாற்றுப... மேலும் பார்க்க

பெரும்பிடுகு முத்தரையருக்கு தவெக: தலைவா் விஜய் புகழாரம்

போருக்குச் செல்லும் முன்பே தனது வெற்றியை உறுதிசெய்யும் வகையில் மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா், வாகை மலா் சூடி போருக்குச் சென்றதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் புகழாரம் சூட்டினாா். மன்னா் பெரும்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் மே 26-இல் நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக மே 26-ஆம் தேதி முதல் நீா் திறந்து விடப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து ... மேலும் பார்க்க