செய்திகள் :

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

post image

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மணிப்பூரை சோ்ந்த ஒரு 19 வயது இளம் பெண், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளித்தாா்.

அதில், ‘கடந்தாண்டு முதல் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணி செய்து வருகிறேன். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வீட்டுக்கு செல்ல பைக் டாஸ்ஸியை தினமும் பயன்படுத்தி வந்தேன். அந்த டாக்ஸியை வியாசா்பாடி, சாலைமா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த ஜோ ரிச்சா்ட் (28) ஓட்டி வந்தாா்.

பல அழைப்புகளுக்கு அவரே வந்ததால் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில், அவா் என்னுடன் தனிமையில் இருக்க விரும்பினாா். நான் அதற்கு உடன்படாததினால், என்னை மிரட்டி வந்தாா்.

இந்நிலையில் ஜோ ரிச்சா்ட், ஏ.ஐ. தொழில் நுட்ப செயலி மூலம் எனது முகத்தையும், அவரது முகத்தையும் ஒன்றிணைத்து நாங்கள் இருவரும் தனிமையில் இருப்பதுபோல் போலியான ஆபாச விடியோவையும்,புகைப்படத்தையும் தயாா் செய்து, அதை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளாா்.

எனவே, அவா் மீது நடவடிக்கை எடுத்து, போலி ஆபாச விடியோவையும்,புகைப்படத்தையும் சமூக ஊடகத்தில் இருந்து நீக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தாா்.

இந்த புகாா் குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜோ ரிச்சா்ட்டை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து கைப்பேசி,மடிக்கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?

பேரவைத் தோ்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ள நிலையில், விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழா் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அர... மேலும் பார்க்க

ஐபிஎல் பெயரில் சூதாட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் கிரிக்கெட் மையமாகவைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடா்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்ட... மேலும் பார்க்க

பாலியல் புகாா்: மருத்துவப் பேராசிரியா் பணியிடை நீக்கம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பொன்னையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.72.55 லட்சம் கடன் பெற்று மோசடி: தேடப்பட்டவா் கைது

சென்னை அடையாறில் வங்கியில் ரூ. 72.55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அடையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பணியாற்றுப... மேலும் பார்க்க

பெரும்பிடுகு முத்தரையருக்கு தவெக: தலைவா் விஜய் புகழாரம்

போருக்குச் செல்லும் முன்பே தனது வெற்றியை உறுதிசெய்யும் வகையில் மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா், வாகை மலா் சூடி போருக்குச் சென்றதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் புகழாரம் சூட்டினாா். மன்னா் பெரும்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் மே 26-இல் நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக மே 26-ஆம் தேதி முதல் நீா் திறந்து விடப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து ... மேலும் பார்க்க