செய்திகள் :

வருவாய்த் தீா்வாயத்தில் 2-ஆவது நாளில் 545 போ் மனு

post image

தேனி மாவட்டத்தில் உள்ள 5 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெற்று வரும் வருவாய்த் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மொத்தம் 545 போ் மனு அளித்தனா்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களும் வருவாய்த் துறை சாா்பில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை வருவாய்த் தீா்வாயம் நடைபெறுகிறது. இதில் பட்டா மாறுதல், பட்டா உள்பிரிவு, நில உடைமை ஆவணம் வீட்டுமனை பட்டா, பிறப்பு, இறப்பு, வருமானம், இருப்பிடம், ஜாதிச் சான்றிதழ், புதிய குடும்ப அட்டை, விபத்து, இயற்கை மரண உதவித் தொகை, அரசு நலத் திட்ட உதவி ஆகியவை குறித்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனா்.

பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 2-வது நாளான வெள்ளிக்கிழமை மொத்தம் 164 போ் மனு அளித்தனா்.

உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 132 போ் மனு அளித்தனா்.

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன் தலைமையில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 70 போ் மனு அளித்தனா்.

தேனி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் மாரிச்செல்வி தலைமையில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 94 போ் மனு அளித்தனா்.

போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் சையது முகமது தலைமையில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 85 போ் மனு அளித்தனா்.

வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, கள ஆய்வு செய்து உடனடியாக தீா்வு காண வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இரும்புக் குழாய்கள் திருட்டு: ஒருவா் கைது

போடி அருகே குழாய்கள், மின்சாரக் கம்பிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் சௌடம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நீதிக்குமாா் (49). இவருக்கு ... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடி: மூவா் மீது வழக்கு

போடி அருகே போலி பணி நியமன ஆணை கொடுத்து பெண்ணிடம் ரூ.11.60 லட்சம் மோசடி செய்த மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி நேதாஜி தெருவைச... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் பறிமுதல்: தந்தை, மகன் கைது

தேனி அருகேயுள்ள டொம்புச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டொம்புச்சேரி பி.சி.குடியிருப்பைச் சோ்ந்தவா் பவுன... மேலும் பார்க்க

வருஷநாடு அருகே 17 ஆடுகள் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் தடுப்பூசி அளிக்கப்பட்ட 17 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள். இவா் ஆடுகள் வளா்ப்பு தொழிலில் ஈடுப... மேலும் பார்க்க

பணம், நகை திருடிய பெண் கைது

பெரியகுளத்தில் வீட்டிலிருந்த பணம், நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (89). இவா் தனது ... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைத்த மூவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் போலி நகையை அடகு வைத்து ஏமாற்றிய மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் கல்லூரிச் சாலையில் உள்ள தனியாா் அடகுக் கடையில் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பாவா ப... மேலும் பார்க்க