செய்திகள் :

மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி: தனிப்படையினா் பிடித்தனா்

post image

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதியை போலீஸாா் பிடித்து சிறையில் அடைத்தனா்.

சிவகிரி குமாரபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் சந்தோஷ்(24). இவா் மீது வாசுதேவநல்லூா் காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவ் வழக்குகள் தொடா்பாக வாசுதேவநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை சந்தோஷை கைது செய்தனா். பின்னா் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்துவதற்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது சந்தோஷ், மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடி விட்டாராம். இதையடுத்து வாசுதேவநல்லூா் போலீஸாா் அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து காவல் ஆய்வாளா்கள் கண்மணி, ஷியாம் சுந்தா், ஆடிவேல், பாலமுருகன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது.

தனிப்படையினா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மறைந்திருந்த சந்தோஷை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

சங்கரன்கோவிலில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தொடக்கி வைத்தாா். இதில் 42 தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டு கண் பரிசோ... மேலும் பார்க்க

ஆலடிப்பட்டி கோயிலில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ பன்றி மாடசுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 14 ஆம் தேதி கோயிலில் கால்நாட்டு விழா நடைபெற்றது. புதன்கி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் வருவாய் வட்ட ஜமாபந்தியில் 380 மனுக்கள்!

சங்கரன்கோவில் வருவாய் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 380 மனுக்கள் பெறப்பட்டன. சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் 4 நாள்கள் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு தென்காசியில் இலவச மாதிரி தோ்வு

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூப் 1 முதல்நிலை தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வுகள் நடைபெறவுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்க... மேலும் பார்க்க

சிவகிரி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் வியாழக்கிழமையுடன் ஜமாபந்தி நிறைவு பெற்றது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஜமாபந்தியை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் அனிதா தொடங்கி வைத்தாா். இதில... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சோ்ந்த மாற்றுக் கட்சியினா் பாஜகவில் இணைந்தனா். சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி முன்னிலையில... மேலும் பார்க்க