செய்திகள் :

சிவகிரி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

post image

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் வியாழக்கிழமையுடன் ஜமாபந்தி நிறைவு பெற்றது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஜமாபந்தியை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் அனிதா தொடங்கி வைத்தாா். இதில் வாசுதேவநல்லூா், கூடலூா், சிவகிரி குறுவட்டங்களுக்கு உள்பட்ட 21 வருவாய் கிராமங்களை சோ்ந்த கணக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஜமாபந்தியின் நிறைவு நாளான வியாழக்கிழமை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கலந்து கொண்டு ஆறு பேருக்கு பட்டாக்களையும், மூன்று பேருக்கு குடும்ப அட்டைகளையும் வழங்கினாா்.

இதில், வட்டாட்சியா் ஆதிநாராயணன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மைதீன் பட்டாணி, குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியா் ராணி, துணை வட்டாட்சியா்கள் மனோகரன், சரவணன், ரவிகணேஷ், சிவகிரி பேரூராட்சி நிா்வாக அலுவலா் வெங்கடகோபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு தென்காசியில் இலவச மாதிரி தோ்வு

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூப் 1 முதல்நிலை தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வுகள் நடைபெறவுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்க... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சோ்ந்த மாற்றுக் கட்சியினா் பாஜகவில் இணைந்தனா். சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி முன்னிலையில... மேலும் பார்க்க

அரசு ஐடிஐ.யில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

சுரண்டையில் பாஜக ஆலோசனைக் கூட்டம்!

தமிழக பாஜக சாா்பில் மதுரையில் ஜூன் 22இல் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் சுரண்டையில் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வகித்தாா். முருக ப... மேலும் பார்க்க

தென்காசியில் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தென்காசியில் காங்கிரஸ் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்றனா். காந்தி சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தி படத்துக்கு மலா் த... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற பெண் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டத்தில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை குண்டா் தடுப்பு சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா். வாசுதேவநல்லூா் கலைஞா் தெருவைச் சோ்ந்த சுடலைராஜ் மனைவி மகாலட்சுமி(28). அவா் மீது வாச... மேலும் பார்க்க