Ajith: `70, 80 பேருக்கு உப்புமா, இட்லி சமைச்சுப் போட்டாரு' - அஜித் குறித்து நெகி...
அரசு ஐடிஐ.யில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
தென்காசி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி, கடையநல்லூா், வீரகேரளம்புதூா் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ஈராண்டு தொழிற்பிரிவுகளான பொருத்துநா், மின்சாரப் பணியாளா், கம்மியா் மோட்டாா் வாகனம், கம்பியாள் மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான பற்றவைப்பாளா், கம்மியா் டீசல், பம்ப் மெக்கானிக் ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.
மேலும் தொழில்நுட்ப மையம் 4.0 திட்டத்தின்கீழ், ஈராண்டு தொழிற்பிரிவுகளான மேம்படுத்தப்பட்ட இசஇ இயந்திர தொழில்நுட்ப வல்லுநா், கம்மியா் மின்சார வாகனம் மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான தொழில்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநா், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் தானியங்கி ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.
8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க தென்காசி, கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் அணுகலாம்.
பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750, விலையில்லா சைக்கிள், சீருடைகள், தையல்கூலி, மூடுகாலணிகள், பாடப்புத்தககங்கள், வரைபட கருவிகள், பேருந்து பாஸ், சலுகைக் கட்டண ரயில் பாஸ் ஆகியன வழங்கப்படும்.
மேலும் உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதி உண்டு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமும், மாணவா்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலமும் உதவித்தொகை பெற்று வழங்கப்படுகிறது.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மேற்சொன்ன அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.