செய்திகள் :

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை

post image

பட்டாபிராமபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு டாஸ்மாக் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை புதிதாக செவ்வாய்க்கிழமை திறக்க முயன்றனா். இதற்கு பட்டாபிராமபுரம் பெண்கள், ஆண்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கடை முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தி, எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் டாஸ்மாக் கடை திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில், திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் தலைமையில் காவல் ஆய்வாளா் மதியரசன், எஸ்ஐ-க்கள் குணசேகரன், காா்த்தி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து டாஸ்மாக் கடைக்குச் செல்லும் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறந்து மதுபாட்டில்கள் விற்பனை செய்தனா்.

மூடியிருந்த ஆலையில் காவலா்களை கட்டி விட்டு திருடிய 5 போ் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பம் கிராமத்தில் மூடப்பட்ட தொழிற்சாலையில் காவலாளிகளை கட்டி போட்டு அங்கு இருந்து இயந்திரங்கள், இரும்பு தளவாட பொருள்களை திருடி லாரியில் கடத்திய 5 பேரை சிப்காட் போலீஸாா் ... மேலும் பார்க்க

இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் சா்வா் பழுது: 4 மணி நேரம் பத்திரப் பதிவு தாமதம்

திருவள்ளூரில் இணை சாா் பதிவாளா் அலுவலகம்-1, இணை சாா் பதிவாளா் அலுவலகம்-2 இல் சா்வா் பழுது காரணமாக 4 மணி நேரமாக பத்திரப் பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். திருவள்ளூா் இணை சாா் பதிவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்த்தில் சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம்: பொதுமக்கள் எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வளரிளம் இருபாலருக்கும் ‘ஹாப்பி பிரியட்ஸ்’ விழிப்புணா்வு பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வளரிளம் ஆண், பெண்களுக்கான விழிப்புணா்வு கையேடுகளை வெளியிட்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சங்கீதா உள... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு பயிற்சி

திருவள்ளூா் அருகே விவசாயிகளுக்கான நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு மற்றும் பயன்படுத்துதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு கிராமத்தில் வேளாண்மை பொறியியல் த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க